செவ்வாய், ஜூலை 05, 2016

தீயினில் கருகிய கலைவாணி.!!!





வெள்ளையடிக்கப்பட்ட ...
ஒரு இனத்தின் வலி!!!
விசாரிக்கப்படாத
மனித உரிமை மீறல்
கூண்டில் ஏற்றப்படாத
போர்க்குற்றம்
பூசி மெழுகப்பட்ட
இன விரிசல்
பக்கங்கள் எரிக்கப்பட்ட
அழகிய புத்தகம்.
தீயினில் கருகிய கலைவாணி.
யாழ் நூலகம் எரிக்கப்பட்டது 1981 இல்..
மீண்டும் 3 ஆண்டுகள் கழித்து 1984 இல் எங்களின் ஹாட்லிக்கல்லூரியின் நூலகத்தையும் எரித்தார்கள். கூடவே ஆய்வுகூடத்தையும் கட்டிடங்களையும் தீவைத்து கொழுத்தினார்கள்.இது வரலாறு.இன்றைய தலைமுறை இதை அறிய வாய்ப்பில்லை.
#1984 பருத்தித்துறை படுகொலை(point pedro massacre)
On 16 September 1984, four Sri Lankan policemen were killed in combat near Thikkam . The Police responded by shooting between 16 and 18 civilians dead in Point Pedro. Police also burned shops and several Hartley College buildings in retaliation for the attack.
1984 Point Pedro massacre refers to the massacre of ethnic Sri Lankan Tamil civilians by the Sri Lankan Police in Point Pedro, a town in Northern Province, Sri Lanka. Police violence resulted in the deaths of at least 16 Tamils and also a high damage to the local property. The Hartley College library was burned down along with its laboratory reminiscent of the Burning of Jaffna library.
🔘தமிழ்ப்பொடியன்®









Comments
Ramesh Ramachanthran Bala புத்தரின் படுகொலை
நேற்று என் கனவில்
புத்தபெருமான் சுடப்பட்டிறந்தார்.

சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக்கொன்றனர்.
யாழ் நுலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!
இரவின் இருளில் அமைச்சர்கள் வந்தனர்.
"எங்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?"
என்று சினந்தனர்
"இல்லை ஐயா
தவறுகள் எவையும் நிகழவே இல்லை
இவரைச்சுடாமல்
ஓர் ஈயினைக்கூடச்
சுடமுயாது போயிற்று எம்மால்
ஆகையால்த்தான்"
என்றனர் அவர்கள்
"சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை"
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச்சென்றனர்
தொண்ணுறாயிறம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்.
சிகாலோகவாத சூத்திரத்தினைக் கொழுத்தி
எரித்தனர்
புத்தரின் சடலம் அஸ்த்தியானது
தம்ம பதமும்தான் சாம்பரானது

கவிஞர் எம்.ஏ.நுஃமான்யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட போது..
UnlikeReply9June 1 at 9:15am
Ramesh Ramachanthran Bala தாவீது அடிகளின் நினைவும் கூடவே
இரண்டு பொக்கிசங்களை இழந்த நாட்கள்!!!
UnlikeReply2June 1 at 9:36am
Vimaleshwara Sabaratnam யாழ் நூலகம் எரிக்கப்பட்டது 1981 இல்..
மீண்டும் 3 ஆண்டுகள் கழித்து 1984 இல் எங்களின் ஹாட்லிக்கல்லூரியின் நூலகத்தையும் எரித்தார்கள். கூடவே ஆய்வுகூடத்தையும் கட்டிடங்களையும் தீவைத்து கொழுத்தினார்கள்.இது வரலாறு.இன்றைய தலைமுறை இதை அறிய வாய்ப்பில்லை.


#1984 பருத்தித்துறை படுகொலை(point pedro massacre)

On 16 September 1984, four Sri Lankan policemen were killed in combat near Thikkam . The Police responded by shooting between 16 and 18 civilians dead in Point Pedro. Police also burned shops and several Hartley College buildings in retaliation for the attack.

1984 Point Pedro massacre refers to the massacre of ethnic Sri Lankan Tamil civilians by the Sri Lankan Police in Point Pedro, a town in Northern Province, Sri Lanka. Police violence resulted in the deaths of at least 16 Tamils and also a high damage to the local property. The Hartley College library was burned down along with its laboratory reminiscent of the Burning of Jaffna library.
LikeReply4June 1 at 10:38am
Jeka Ruban · Friends with Sithamparappillai Ajanthan
Yes,this is true.
Mary Eileen Antony Thaveethu adikalar enathu appavin uncle .enaku thaa thaa murai .
Sara Sivam ஹாட்லிக்கல்லூரியை அழிப்பதற்கு சந்தர்ப்பம் பார்த்துக்
கொண்டிருந்தார்கள்,காரணம் ஒரேவாரத்தில் ஹாட்லியின்
அந்த வருடத்தின் A/L வகுப்பு மாணவர்கள் இயக்கங்களில்

சேர்ந்தது மிகவும் பரபரப்பான செய்தியாக இருந்தது 
அந்த நேரம் ஈழநாடு செய்தி, நூற்றுக்கும் மேற்பட்ட வருங்கால
விஞ்ஞானிகள் தங்களைத்தியாகம் செய்து போராடக்களமிறங்கினர்
UnlikeReply5June 1 at 5:16pm
Saththiyan Satchithanantham These are just the beginning of a bloody war......
UnlikeReply2June 1 at 5:38pm
Vimaleshwara Sabaratnam Saththiyan Satchithanantham

சில நிகழ்வுகள் கசப்பானவை... ஆறா வடுக்கள்.


இப்படியான பதிவுகளினை மீழ் நினைவு செய்யும் போது;
இளம் தலைமுறையினர் சிலர் முகம் சுழிக்கிறார்கள்.

"அண்ணை எதுக்கு உதெல்லாம் இப்ப ஞாபகப்படுத்துறியள்?"

"இவ்வளவு காலமும் அனுபவிச்சது காணும்;எல்லாத்தையும் மறந்து இனி ஒண்டா இருக்குற காலம் இது"

"அண்ணை வெளிநாடுகளில் நீங்கள் சொகுசா இருந்து கதைக்கலாம் ... இங்க நிலமை வேற"

இப்படியான குற்றச்சாட்டுகள் சில நேரங்களில் என் காதுகளில் விழும்.

இருந்தாலும்;

மறைக்கப்பட்ட வரலாறுகளை, மறக்கப்பட்ட வலிகளை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்துவது காலத்தின் கடமையாக உள்ளது.

ஒரு தலைமுறை ஓயாது சலிக்காது தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு சில விடயங்களை கடத்திச்செல்வது அவசியம்.

இதுவே ஒரு வலிசுமந்த இனத்தின் விழுமியங்களில் ஒன்று.
LikeReply10June 1 at 5:57pm
பொன் கணேஷ் எங்களின் ஆறா வடுக்கள் காலத்தால் அழிக்கேலாது. அவர்கள் எதனை முதலில் எரித்து சாம்பாராக்கினார்கள் என்பதை இன்றைய முகம் சுழிக்கும் இளையோர் ஆளமாக புரிந்து கொண்டால் விளங்கும் இலங்கையில் தமிழினத்தை எப்படி மாற்றப்போகிறார்கள் என்று.
Vimaleshwara Sabaratnam
Write a reply...
நித்தியா மரியாம்பிள்ளை கட்டிடத்திற்கு விரும்பின வண்ணம் பூசலாம்,ஆனால் அத்திவாரத்தின் வண்ணம் மாறாது. வடுக்கள்.
UnlikeReply2June 1 at 6:42pm
Vimaleshwara Sabaratnam அருமையா சொன்னீங்கள் அண்ணை
LikeReply1June 1 at 6:45pm
Vimaleshwara Sabaratnam
Write a reply...
இரா. மயூதரன் வெள்ளை அடிக்கப்பட்டு சீவி சிங்காரித்தாலும் அழிக்கப்பட்ட வரலாறு அழிக்கப்பட்டதாகிவிட்டது. தமிழர் வரலாற்றின் ஆன்மாவில் ஏற்பட்ட காயம் வெற்று பூச்சுக்களால் ஆற்றிவிடாது.
LikeReply2June 1 at 7:42pm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge