செவ்வாய், ஜூலை 12, 2016

அம்மாணை எனக்கொரு ஆசை









அம்மாணை எனக்கொரு ஆசை

ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல...
ஒப்பனுக்கெண்டாலும் நிம்மதியா நித்திரை கொள்ள..

எத்தனை நாளைக்கு இங்க குளிரில கிடந்து சாக
இஞ்சை ஒரு கோதாரியும் இல்லை காசைத் தவிர.!

சில்லம்பல்லமாய் சிதறிப்போச்சு எங்கட வாழ்க்கை
மக்கரிப்பாங்கள் எங்கட ஊருக்குள்ள வந்ததால.!

கரவலை மீனில ஒரு சொதியும்..
கறுத்தப்பச்சையரிசி சோறும்...
கறுமொறெண்டு அப்பளப்பொரியலும்...
சுட்ட பத்தாம்பட்டி கருவாடும்...
உந்த "சைனீஸ்" காரண்ட "பிறைட் றைஸ்" பிச்சை வாங்கும்.

சாதுவா கோப்பிறேசன் கள்ளைப்போட்டு
தென்னை மர நிழலில சாரத்தைப்போட்டு
தலை மாட்டில "ரேடியோவில" பாட்டைப்போட்டு
சும்மா கிடந்தா நித்திரை கண்ணை செம்மும்.

அம்மாணை எனக்கொரு ஆசை
ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல

கொடிகாமத்து கூழன் பிலாப்பழத்தை
கொண்டு வருவா சரசு மாமி சந்தை "வானில்"
நாலா புறிச்சு ஒரு பங்கு வாங்கி வந்து
நல்லா கையிலை எண்ணை பூசி
சுழையை பிரிச்சுத்திண்டா புறங்கையில ஓடும் தேனா

"கூப்பன்" மாவில புட்டைக்குழைச்சு
சாதுவா தேங்காய்ப்பூவை மேல தூவி
சீனியும் கொஞ்சம் போட்டு
கறுத்தக்கொழும்பான் மாம்பழத்தை துண்டாய் சீவி
குழைச்சு அடிச்சா சொல்லி வேலையில்லை.
கொட்டையை வடிவா சூப்பி
திண்டபிறகு சருவத்துக்கு பக்கத்தில தாட்டு
வைச்சா முளைக்கும் மாங்கண்டு.

அம்மாணை எனக்கொரு ஆசை
ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல


சில்லம்பல்லமாய் சிதறிப்போச்சு எங்கட வாழ்க்கை
மக்கரிப்பாங்கள் எங்கட ஊருக்கை வந்ததால

அண்ணை கனடாவில ஓடாய்தேஞ்சு
என்னை எடுத்துவிட்டான் இஞ்சை
"ஏஜென்சி" காரனிட்ட காசைக்கொட்டி

குண்டி தேய உழைக்க வேணும்
வாங்கின கடன் குடுக்க வேணும்

என்ன கோதாரிக்கு இஞ்சை அனுப்பினவங்கள்
ஒரு அறுப்பும் விளங்கயில்லை.

என்ர சினேகித பொடியள நினைச்சா கவலை வரும்
அம்மான்ர மடியை நினைச்சா அழுகை வரும்.

சாப்பிடும் போது பிரைக்கடிக்கும்
ஊரில மச்சாள் தான் நினைக்கிறாள் எண்டதும்
அவள் பாத்து கொடுப்புக்குள்ள சிரிச்சதுதான் நினைவு வரும்.

மச்சாளைப்பார்க்க பின்னெரத்தில மாமி வீடு
முட்டைப்பொரியலும் நண்டுக்கறியும்
மருமோனுக்கு சக்க வசதி
விக்கல் வந்து நிமிந்து பாத்தா
மச்சாள் தருவாள் செம்பில பச்சைத்தண்ணி
கடைசியாய் குண்டு கோப்பையில் தேத்தண்ணி

அம்மாணை எனக்கொரு ஆசை
ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல
ஒப்பனுக்கெண்டாலும் நிம்மதியா நித்திரை கொள்ள

எத்தனை நாளைக்கு இங்க குளிரில கிடந்து சாக
இஞ்சை ஒரு கோதாரியும் இல்லை காசைத் தவிர

அம்மாவாணை எனக்கொரு ஆசை
என்னைத் திருப்பி அனுப்பவேணும்..!!!!


© தமிழ்ப் பொடியன்

https://www.facebook.com/podiyan

(நன்றி:
புகைப்படம்:
அருள் அல்லு)

NOTE:
அம்மாவாணை- அம்மா மீது சத்தியம்
ஒப்பனுக்கு- கொஞ்சநேரம்
இஞ்சை- இங்கே
சில்லம்பல்லம்- சின்ன சின்ன துண்டாய்
கோதாரி, மக்கரிப்பான் - அநியாயம் செய்பவன்(இது யாழ்ப்பாணம் வடமராச்சி கிழக்கில் மிக வழமையான பேச்சு வழக்கு சொல்)
செம்மும்- நன்றாக
கூப்பன் மா- கோதுமை மா

சில யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கு தமிழ் மட்டக்களப்பிலோ,திருகோண்மலையிலோ பேசினால் சிரிப்பார்கள்.

கொப்பர்,கொம்மா,கோத்தை,பேந்து வாறம் இப்படியான பேச்சு வழக்கு சொற்களை பேசும் போது என்னைப்பார்த்து சிரித்தார்கள்.ஏனெண்டா அவர்களுக்கு அது விளங்கவில்லை.






Prashanna Arumugathasan Micham meethi erukka? 10minsla vatein 
Krishanthy Nishanthakumar //கரவலை மீனில ஒரு சொதியும்..
கறுத்தப்பச்சையரிசி சோறும்...
கறுமொறெண்டு அப்பளப்பொரியலும்...

சுட்ட பத்தாம்பட்டி கருவாடும்...
உந்த "சைனீஸ்" காரண்ட "பிறைட் றைஸ்" பிச்சை வாங்கும்.//
ஜெயபாலசிங்கம் ஜெயபிரசாந்நீங்கள் தான் ஐயா தமிழ் பொடியன்
Kalai Chelvan Any time u can come here . Always Well Come SRILANKA
Arunthavam Pakeetharan காலம் பல கடந்து 
புலத்திலே வாழ்ந்தாலும் 
நிலத்தை நினைப்பவன் 

நீயாச்சே.. !!
இன்னும் உன்னிடம் 
வீசுகிறதே 
மண் வாசமும் 
தமிழ் பற்றும் தானே 
தமிழ் பொடியா....!
இந்திரா சிவம் கரிகரன் Dai kalai nee enna srilanka vaa vilaikku vaankiddiya enkalukku vara theriyaathaaaa
Malathi Murugapoopathy · 14 mutual friends
Mann manaththai yaarum marappathillai chandran.
ஜெயபாலசிங்கம் ஜெயபிரசாந்அண்ணை உந்த பழைய சோற்றையும் பழைய கறியையும் விட்டுவிட்டீங்கள்
Vimaleshwara Sabaratnam அம்மாவாணை- அம்மா மீது சத்தியம்
ஒப்பனுக்கு- கொஞ்சநேரம்
இஞ்சை- இங்கே

சில்லம்பல்லம்- சின்ன சின்ன துண்டாய்
கோதாரி, மக்கரிப்பான் - அநியாயம் செய்பவன்(இது யாழ்ப்பாணம் வடமராச்சி கிழக்கில் மிக வழமையான பேச்சு வழக்கு சொல்)
செம்மும்- நன்றாக
கூப்பன் மா- கோதுமை மா

சில யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கு தமிழ் மட்டக்களப்பிலோ,திருகோண்மலையிலோ பேசினால் சிரிப்பார்கள்.

கொப்பர்,கொம்மா,கோத்தை,பேந்து வாறம் இப்படியான பேச்சு வழக்கு சொற்களை பேசும் போது என்னைப்பார்த்து சிரித்தார்கள்.ஏனெண்டா அவர்களுக்கு அது விளங்கவில்லை. 
வழக்கறிஞர் சு. கலைச்செல்வன்இக்கால சங்க இலக்கியம்.காலத்தையும் சூழலையும் காட்டுவதால்
Karan Suba எங்கட நாட்டு தமிழ்ல சக்க போடு போட்டுட்டீங்கள் பொடியா....சும்மா அந்த மாதிரி இருந்திச்சு. ஊர் ஞாபாகங்கள அப்பிடியே சொல்லிட்டா பொடியா....நீ நல்லா இருப்பா மேன...
Kalai Chelvan thanx tamilpodiyan remember our area words
Suki Saila Ovia Wow palaiya ninaivukal vanthu alaimothukirathu ithai padikkum poluthu ellorum ore mathiri vaalkkai vaalthirukrom;-) nice
உத்தமன் மார்க்கண்டு பனம் கள்ளும் கடல் காற்றும் கரவலைவாடி சொறும் கனவாய் கரழ் சலமங்கு காலை சொதி எனி எப்பொது தான் நாம் சுவைப்போம்
Mrs.Emily Dayan I think most of us have the same feeling but no one attempt to write them or share them. But you are doing a great job. Hats off to you. "
Mayooran Velayutham · 112 mutual friends
Sorgame enralum nam uorai pol varuma?
See Translation
Arunthavam Pakeetharan என்ர மோன் 
வெளிநாட்டில 
அவன்ர கதைய கேட்டிங்களோ அப்பா...?
Nisha Raj Neenka sonnathu athanaiyum sathiyamana unmai
Rajarajan Thiagarajah கடல் தண்ணி குண்டி நனைக்க கக்காவுக்கு இருந்த சுகம்
"ஏசிக்" கக்கூசுக்குள்ள ஒப்பனுக்கும் இல்லை. /// அட விழுவாரே குளம் குட்டை கடல் எல்லாதாயும் நாறடிச்சுப் போட்டியளே .................. கவிதை தூக்குது பெடியா . எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் .
ஜெயா ஆனந்த் கடல் தண்ணி குண்டி நனைக்க கக்காவுக்கு இருந்த சுகம்
"ஏசிக்" கக்கூசுக்குள்ள ஒப்பனுக்கும் இல்லை.
இது உண்மையா தமிழ்பொடி? அப்ப உந்த மீனையா கோதாரில
...See More
Karan Kanapathi · Friends with Amuthan Na and34 others
enna seyvathu ellam poochchuthu.anka ullathukalukku onrume vilankathuuuuuu
Kopirajh Kopi · Friends with Thas Thasan and 3 others
100 vetha unnmai
Jay Wimal · Friends with Elango Mark and 1 other
Nice<3 span="">
Raji Nim · Friends with Ariyakumar Rathees and45 others
Real .
Rasalingam Geethanjan கலக்குறிங்கள்!
Lisahna Keya Kedka nallaayththaan itukku
ஆழி அமுதன் பிளாவில ஒடியல் கூழ் குடிக்கும் சுகமோ ஆ ஆ ஆ ஆ்்்்்்்்
Elango Anantharasa அண்ணா, நீங்கள் கூறிய அந்த நினைவுகள் இன்று இல்லையே...... எல்லாம் அந்த மக்கரிப்பான்கள் வந்ததால் மறைஞ்சு போச்சு....
Kumarathasan Kumarasamy ஒரு பிரச்சளையும் இல்லை தம்பி... பிறந்தது இந்த நாட்டிலைதானே...! உங்கையுள்ள சிற்றிசனை கான்சல்பண்ணிட்டு உடனை வரலாம்தானே...! இது எப்புடி..?
Ruthirakumar Jayaratnam அம்மாணை எனக்கொரு ஆசை
ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல
Ruthirakumar Jayaratnam உந்த மண்ணிலை படுக்க ஆசைப்பட்டால் நீங்களும் ஒரு பயங்கரவாதிதான்........
Vimaleshwara Sabaratnam Kumarathasan Kumarasamy
அண்ணை வாறதில ஒரு பிரச்சினையும் இல்லை...
ஆனா பிரச்சினை என்னண்டா...

2003 இல கஸ்ரப்பட்டு 3 banking exam எழுதி , நேர்முகத்தேர்வும் முடிச்சு ...
appointment letter உம் வந்த பிறகு நெல்லியடியில உள்ள தனியார் வங்கி ஒன்றில வேலை உறுதியான பிறகு.....
திடீரென முதல் நாள் சொன்னாங்கள் “தம்பி உங்கட இடத்துக்கு வேற ஒரு ஆளை மேலிடத்தில இருந்து போட்டாச்சு” எண்டு.
கடுப்பாகிய நான் காரணத்தை கேட்டபோது ஒரு கட்சிக்கு கிட்டத்தட்ட 10 லச்சம் குடுத்தால் ஏதாவது பாத்து செய்யலாம் எண்டு பதில் வந்திச்சு.
காசை விட்டெறிஞ்சு வேலையை எடுத்திருப்பன். 
ஆனால் எதுக்கு???
கஸ்ரப்பட்டு பரீட்சை எழுதி நேர்முகத்தேர்வும் முடிச்சு நேர்மையாக நேர்வழியில் வந்த வேலைக்கு எதுக்கு காசு குடுக்கவேணும் எண்டு இன்னொருத்தனுக்கு நான் பிச்சை போட்டன்.

இந்த லட்சணத்தில இங்க உள்ள வேலையை விட்டிட்டு வந்து நெல்லியடி பஸ் ஸ்ராண்டில இருந்து நான் என்ன பிச்சையா எடுக்கிறது??

அப்பிடி ஒரு நிலை வந்தா அண்ணை நீங்க கூட ஒரு சதமும் பிச்சை போடமாட்டியள்...lol
Srisiva Aliyur Sellakkuddy நாலைஞ்சு செத்தல் மிளகாய் எடுத்து அம்மி யில போட்டு அஞ்சாறு
இழுவை இழுத்து காரல் மீன் வயிறு கீறி நல்லாக் கொதிக்க வச்ச காலைச்சொதிய கூப்பன் மா புட்டுக்க குழப்பி ஒரு கட்டு கட்டிட்டு நம்ம மண்ணில கால் கைய புதைச்சு படுத்தா வரும் பாருங்க நித்திரை அப்பாடா அந்த காலம் எப்ப வருமோ
Sara Sivam அருமையா மண்வாசனை( மீன்வாசனை) மூக்கினுள் நுழைந்து
இதயத்தை வருடுகின்றது, மீண்டும் கிடைக்குமோ ? நம் மண்ணணோடு.
பார்க்கலாம், ?
எஸ். தவபாலன் அருமை
முற்றத்து வேம்பு முழுதாய் நின்ற நாவல்
காலையில் கூவும் சேவல் 

கவல் நின்ற கடவுள் இவை
எங்கே என்ற ஆவல் எனக்கு 
நம்மூரும் நல்லாய் மாறிப்போச்சு
கடல் தண்ணியில் கை நனைச்ச காலம் போய்
இங்கையும் இப்ப எல்லாத்துக்கும் ஏசி 
கஞ்சாவும் குடுவும் பஞ்சமில்லாமல் கிடைக்குது
பிறகென்ற கோப்பிறேசன் 
கள்ளுக்குத்தான் பஞ்சம் கசிப்புக்கில்லை
அம்மியும் குளவியும் நான் கண்டு கனநாள்
கூழன் பிலாப்பழம் உண்டு பல நாள் 
அம்மாணைச்செல்றன் உங்கேயே இருந்திடுங்கோ
Sathiya Kumar
Sathiya Kumar
Gajamathi Shanmugarajan · Friends with Anusha Morais
Well said... really nice one I have read several times and tremendous experience
Ram Shiva Sema anna...

Thavarasa Selva Manvaasanai arumai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge