படலை திறந்து
என் முற்றத்தில்
என் காலடி...
என் முற்றத்தில்
என் காலடி...
சில்லென்று
சோழகக்காற்று
அக்குள் நுழைந்து
ஐசாய் குளிரும் உணர்வு...
சோழகக்காற்று
அக்குள் நுழைந்து
ஐசாய் குளிரும் உணர்வு...
எங்கட வீட்டு வீமன்
வாலை ஆட்டி குரைக்கும்...
வாலை ஆட்டி குரைக்கும்...
"அம்மோய்.."
சொல்லாமல் கொள்ளாமல்
போய் நிண்டன்.
சொல்லாமல் கொள்ளாமல்
போய் நிண்டன்.
அம்மாவாணை அம்மா நம்பவே இல்லை!!
கடவுளாண அப்பா நினைச்சே பாக்கயில்லை!!!
கடவுளாண அப்பா நினைச்சே பாக்கயில்லை!!!
கண்ணீர் கனக்க கதைக்க
வார்த்தைகள் ஊமையாகின.
வார்த்தைகள் ஊமையாகின.
பெருமூச்சொன்று
அடிவயிற்றில் ஏறி இறங்க...
அடிவயிற்றில் ஏறி இறங்க...
அழுது முடிச்சு...
இமைகள் விறைச்சு;
கண்ணை திறக்க...
கனவு கலைஞ்சாலும்;
கண்ணீர் இனித்தது
கண்ணீர் இனித்தது...
ஊர் போகும் நினைவுகள் போல!!!!
இமைகள் விறைச்சு;
கண்ணை திறக்க...
கனவு கலைஞ்சாலும்;
கண்ணீர் இனித்தது
கண்ணீர் இனித்தது...
ஊர் போகும் நினைவுகள் போல!!!!
🔘தமிழ்ப்பொடியன்®

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக