செவ்வாய், ஜூலை 05, 2016

நீதிக்கு வயது 100






நூறு வருடங்களுக்கு முன் ஆர்மேனியா நாட்டில் நடந்தது "இனப்படுகொலை" என ஜேர்மன் அரசு அறிவித்துள்ளது.
நீதி கிடைக்க 100 வருடமாக ஆர்மேனிய மக்கள் போராடினார்கள்.
அதாவது தன் பாட்டனுக்கு நீதி கிடைக்க கொள்ளுப்பேரன் போராடியிருக்கிறான்.
மூன்று தலைமுறையாக ஒரு இனத்தின் வலி; அதன் உணர்வும் வேகமும் அழியாது கடத்தப்பட்டுள்ளது.
நீதி கிடைக்கவில்லை என அந்த மக்கள் சோர்ந்துபோயிருந்தால் அவர்களுக்கான நீதி இன்று கூட கிடைத்திருக்காது.
துருக்கி இன்று போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேடிக்கை என்னவெனில்...
100வருடம் கழித்து
யாரை தண்டிப்பது????
"கொன்றவனின் தலை நரைத்து கூன்விழுந்த பின்போ கூண்டிலேற்றுவீர்?"
(2009 நான் எழுதிய கவிதையின் ஒரு வரி)
ஆர்மேனியர்களுக்கு கிடைத்த "நீதிக்கு" வயது 100.கூன்விழுந்து தலை நரைத்து மரணப்படுக்கையில் கிடக்கிறது அவர்களுக்கான "நீதி".
நாளையோ நாளை மறுநாளோ அது மீண்டும் செத்துவிடும்!!!!
இதுதான் உலக நியதியும் கூட.
The German parliament has passed a symbolic resolution recognising the 1915 massacre of Armenians by Ottoman forces as a "genocide."
The resolution was passed with a "striking majority" said President of the German Bundestag Norbert Lambert, with only one politician voting against it and one abstaining.
Between 600,000 and 1.5 million Armenians, and other minorities, are estimated to have been killed by what was then-Ottoman Turkey during World War One.
Turkey has always rejected the term "genocide," saying there was no systematic attempt to destroy a people.
🔘தமிழ்ப்பொடியன்®







Comments
Sara Sivam ஜெர்மன் அரசு அங்கீகரித்தது பெரிய விடயம், உலகநாடுகளுக்குத்
தெரியும் ஆர்மேனியக்கொலைகள் இனப்படுகொலைகள் என
அதேநேரத்தில் ஆர்மேனியர்களிடம் இனப்படுகொலைகளுக்கான

சகல ஆதாரங்களும் இருந்தன, இருந்தும் ஒருநூற்றாண்டு ஆகி
விட்டது, ஈழத்தில் ???? செயததே சர்வதேசம் , இனப்படுகொலை
என்பதற்கான ஆதாரம்????( உணர்ச்சிவசப்படுவதால் 
பிரயோசனமில்லை) மிகவும் சாமர்த்தியமாக அழித்துவிட்டார்கள்
மனித சாட்சியங்களெல்லாம் சபைக்கேறாது, , இதையறிந்துதான்
நமது அரசியல்வாதிகள் வேறுகோணத்தில் காய் நகர்த்துகிறார்கள்!?
இலங்கை ஒருதீர்வைநோக்கிச்செல்கிறது என்பது மட்டும் உண்மை,
அதற்கு கொடுக்கப்படும் விலை,பெரிது இலங்கையில் நடந்தது 
போர்ககுற்றம் மட்டுமே ( இனப்படுகொலை தான் அந்தத் தீர்வுக்கான
விலை) இது என் ஊகமும்,,அறிந்ததும்மட்டுமே
அதை பதிவு செய்யதுள்ளேன்..

UnlikeReply6June 3 at 10:25amEdited
Sara Sivam போர் நடந்து முடிந்து ஏழுவருடங்கள் ,இனப்படுகொலைக்கான
எந்த ஆதாரமும் இல்லை, திரட்டப்படவுமில்லை, ஆனால் 
ஆர்மேனியர்கள் தங்கள் மீதான இனப்படுகொலைக்கான

ஆதாரங்களுடன்தான் கடந்த 100 வருடமாக அலைந்தார்கள்
ஓரளவு வெற்றியும் பெற்றாரகள் , உத்தியோகபூர்வமாக அல்லாமல்
வாய்மொழிமூலமாகஆர்மேனிய இனப்படுகொலைதான் என்பதை
பிரான்ஸ் ஒப்புக்கொண்டு 30 வருடங்களாகிவிட்டது

Gunasingam Pirasath //அதாவது தன் பாட்டனுக்கு நீதி கிடைக்க கொள்ளுப்பேரன் போராடியிருக்கிறான்// எங்கோ உதைக்கின்றது.... மாற்றியமைத்தால் நன்றாக இருக்கும்
LikeReply1June 3 at 10:42am
Vimaleshwara Sabaratnam எப்பிடி மாற்றியமைக்க???
Gunasingam Pirasath சரி சரி சரி.....
Vimaleshwara Sabaratnam அதில் ஏதும் பிழை இருக்கோ??
Senthuraan Ponnampalam முப்பாட்டனுக்காக கொள்ளுப்பேரன்.
Gunasingam Pirasath பிழையேதும் இல்லை.... சொல்ல வந்த விடயத்தை தவறாக புரிந்து கொண்டேன்
Vimaleshwara Sabaratnam

Write a reply...
Jega Srinivasan முக்கியமான கவனத்தில் கொள்ளவேண்டிய பதிவு!
UnlikeReply1June 3 at 4:38pmEdited
Pirasath Piraba · 51 mutual friends
ஆயிரம் தடைவந்தாலும் எழச்சொல்லி நிற்க்கும் வழிகாட்டி
UnlikeReply1June 3 at 5:02pm
Sivasakthy Gopalapillai காலம் கடந்த நீதியால் ....இப்போதாவது...உண்மையை ஒப்புக்கொண்டனரே ...என்ற தன்மையே நீண்டபோராட்டத்தின் பயன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge