இந்தவாரம் ஒரு தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது மீண்டும் ஒரு பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏனெனில் ஒரு அப்பாவி மீனவனின் உயிரை குடிக்கும் அளவுக்கு இலங்கை கடற்படையின் துப்பாக்கிகள் இன்னமும் கோபத்துடன் இருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. பல ஆண்டுகளாக அவர்கள் செய்யும் கொலைகளுக்கு பல்வேறான காரணங்களை சொன்னார்கள். ஆனால் இப்போது இதற்கு என்ன காரணம் சொல்லப்போகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.
ஏற்கனவே இலங்கையின் பிரதிநிதிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தை சென்ற வருடம் நடந்தேறியது.
இதில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். இந்த பேச்சுவார்த்தையில் பல விடயங்கள் பேசப்பட்டபோதும்; முக்கியமாக “”எல்லை தாண்டும் தமிழக மீனவர்களின்" பிரச்சினை சம்பந்தமாக பேசப்பட்டதாய் தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின.
இதில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். இந்த பேச்சுவார்த்தையில் பல விடயங்கள் பேசப்பட்டபோதும்; முக்கியமாக “”எல்லை தாண்டும் தமிழக மீனவர்களின்" பிரச்சினை சம்பந்தமாக பேசப்பட்டதாய் தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின.
தமிழக மீனவர்கள் ஏன் எல்லைதாண்டி வருகிறார்கள்?
இந்தியாவின் தெற்குப்பகுதியில் குறிப்பாக இராமேஸ்வரம் பகுதிக்கும் இலங்கையின் வடமுனைக்கும் இடையில் இருப்பது வெறும் 28 கிலோமீற்றர்தான். அதாவது யாழ்ப்பாணத்துக்கும் பருத்தித்துறைக்கும் இடையில் உள்ள தூரத்தைவிட குறைவான தூரம் இது.தமிழக மீனவர்களின் மீன்பிடி வள்ளங்கள் “உயர்வலுக்கொண்ட" இழுவை எந்திரத்தையும்; நவீன தொழில்நுட்ப படகுகளாகவும் இருக்கின்றன்.எனவே இலகுவில் அவர்கள் இலங்கையின் கடற்பரப்புக்குள் புகுந்துவிடுகிறார்கள். அத்தோடு சிலநேரம் சீரற்ற காலநிலையால் ஒரு சிலர் வழிமாறியும் வருகிறார்கள்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சர்வதேச கடற்பரப்பின் “எல்லைக்கோடு" இன்னமும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கடற்பரப்பில் ஒரு எல்லைக்கோடு கீறுவதில் இன்னமும் “”இழுபறி” நிலை இருநாட்டுக்கும் இடையில் இருந்துகொண்டே இருக்கிறது. “ கச்சதீவு" பிரச்சினை இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
2009 இக்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழக மீனவர்கள் ஓரளவுக்கு இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை தவிர்த்துக்கொண்டார்கள். ஆனாலும் அவர்களில் பலர் இலங்கை கடற்படையால் குறிவைத்து தாக்கப்பட்டார்கள். சுமார் 700 இக்கும் அதிகமான தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றுவிட்டதாக ஆதாரமான குற்றச்சாட்டு ஒன்று இருக்கிறது. இதற்கான எதிர் நடவடிக்கையை இந்திய மத்திய அரசு எடுக்கவேயில்லை. இந்திய மத்திய அரசானது இலங்கை ஆழும் அதிகார அரசுகளுடன் காலத்துக்கு காலம் நல்லுறவை பேணி ஒரு நெகிழ்ச்சியான போக்கையே கடைப்பிடித்துவருகின்றன.
விடுதலைப்புலிகள் மீதான இரு அரசுகளின் கடும்போக்கும் அவர்களின் ஒத்த மனநிலையும் தான் தமிழக மீனவர்களின் கொலைகளுக்கு முக்கிய காரணம் என தமிழக அரசியல்வாதிகளின் கடும் குற்றாச்சாட்டு இருக்கிறது.
விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழக மீனவர்கள் பலர் அவர்களுடன் இணைந்து இயங்கினார்கள் என்ற குற்றச்சாட்டும்; ஆயுதங்களையும் பொருட்களையும் கடத்தினார்கள் என்ற குற்றாட்டுமே தமிழக மீனவர்களின் கொலைகளுக்கான காரணங்களாக இரு அரசாலும் சொல்லப்பட்டது.
2009 இக்குப்பிறகு கணிசமான அளவு “வன்முறைச்சம்பவங்கள்" குறைந்துவிட்டன என்ற நிலையில் மீண்டும் இந்த வாரம் ஒரு “சூட்டுச்சம்பவம்" தமிழக எல்லைக்கடற்பரப்பில் நிகழ்ந்து ஒரு அப்பாவி “தமிழக மீனவனின்" உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
2009 இக்குப்பிறகு கணிசமான அளவு “வன்முறைச்சம்பவங்கள்" குறைந்துவிட்டன என்ற நிலையில் மீண்டும் இந்த வாரம் ஒரு “சூட்டுச்சம்பவம்" தமிழக எல்லைக்கடற்பரப்பில் நிகழ்ந்து ஒரு அப்பாவி “தமிழக மீனவனின்" உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் அண்மைக்காலமாக இலங்கையின் வடக்கு கடற்பரப்புக்குள் அதிகமாக ஊடுருவுவதன் பின்னணியில் பல குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் முன்வைக்கப்படுகின்றன.
1.இலங்கையின் வடக்கு கடற்பரப்பில்(மன்னார் வளைகுடா,வடமராட்சிக்கிழக்கு,வடமராட்சி) அதிகளவான மீன்வளம் உள்ளது.
2.யாழ்ப்பாணத்தில் பழையபடி “இந்தியாவில் இருந்து பொருட்களை கடத்தும்" தொழில் அதிகமாக நடக்கிறது.
(வரி இல்லாமல் பொருட்களை கடத்துவதால் அதிக இலாபத்துடன் யாழ்ப்பாணத்தில் விற்கமுடியும்)
(வரி இல்லாமல் பொருட்களை கடத்துவதால் அதிக இலாபத்துடன் யாழ்ப்பாணத்தில் விற்கமுடியும்)
3.இலங்கை -இந்தியாவுக்கான விமான பயணச்சீட்டை விட மிக குறைந்த பணத்துக்கு இந்தியாவுக்கு ஆட்களை கொண்டுசெல்லமுடியும்.
4.போதைப்பொருட்கள்(கஞ்சா) மிக அதிகளவில் அண்மைக்காலமாக இந்தியாவில் இருந்து இலங்கையின் வடபகுதி கடற்கரைப்பகுதிகளுக்கு கடத்தப்படுகின்றன.
கஞ்சா வியாபாரத்துக்கும் தமிழக மீனவர்களுக்கும் என்ன சம்பந்தம்?
2009 இக்குப்பின்னர் யாழ்குடாநாட்டில் கஞ்சா பாவனையும் விற்பனையும் மிகவும் அதிக இலாபம் தரும் தொழிலாக மாறிவிட்டது. யாழ்ப்பாணத்தின் வடபகுதில் கோடிக்கணக்கான கஞ்சா இலங்கை பொலிசாரால் பறிமுதல் செய்யப்படுகிறது. பலர் கைதாகி பின்னர் விடுதலையாகி பின்னர் கைதாகி பின்னர் மீண்டும் விடுதலையாகி “கஞ்சா வியாபாரத்தை” செய்கிறார்கள்.ஒரு சில முக்கிய அரசியல் புள்ளிகளின் ‘’அநுசரணையோடுதான்" இந்த கஞ்சா வியாபாரம் இன்னமும் பலகோடிக்கணக்கில் நடைபெறுவதாய் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
இதில் உண்மை இல்லாமலும் இல்லை. ஏனெனில் யாழ்குடாநாட்டில் மிக இலகுவாக “கஞ்சாவை”குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ளமுடியும். கரையோர குக்கிராமங்களில் வாழ்ந்த ஒரு சில கடத்தல்காரர்கள் இன்று கோடீஸ்வரர்களாக வலம்வருவதன் பின்னணியும் இதுதான்.
தமிழகத்தில் இருந்து பெரும்தொகை “கேரள கஞ்சா” இலங்கை இந்திய கடற்பரப்பில் கைமாற்றப்படுகிறது. இதில் ஒரு சில தமிழக மீனவர்களின் பங்களிப்பு இருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. அத்தோடு இந்த கடத்தலில் “இந்திய-இலங்கை” கடலோர எல்லைக்காவல்த்துறைக்கும் கணிசமான “”லஞ்சம்" கிடைக்கிறது என்பதும் உண்மை. இவற்றை ஆதாரத்துடன் நிரூபிப்பது கடினம். ஆனால் இதுதான் நடக்கிறது என்பதை எல்லோரும் அறிவார்கள்.
ஆக;
ஒரு சில தமிழக மீனவர்கள் கடத்தல் தொழிலுக்காக இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைகிறார்கள். இன்னும் ஒருசிலர் பேராசையில் அதிக மீன்களை பிடிக்க வருகிறார்கள். மிகக்குறுகிய அளவு மீனவர்கள் மாத்திரம் பாதைமாறி வருகிறார்கள்.
எல்லைதாண்டும் மீனவர்களுக்கான நடவடிக்கை என்ன?
பொதுவாக எல்லைதாண்டி அத்துமீறி கடற்பரப்புக்குள் நுழையும் குற்றச்சாட்டு தமிழக மீனவர்கள் மீதுதான் இருக்கிறது. ஒப்பீட்டளவில் இலங்கை மீனவர்கள் யாரும் இந்தியாவின் கடற்பரப்புக்குள் எல்லை மீறி நுழைந்து இந்திய கடலோர காவல்படையால் கைதுசெய்யப்பட்ட சம்பவங்களோ அல்லது தாக்கப்பட்ட சம்பவங்களோ மிக அரிது.
அண்மைக்காலமாக இந்திய தமிழக மீனவர்கள் தங்களின் “உயர்வலு" கொண்ட “றோலர்" படகுகளால் இலங்கையின் வடபகுதி மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்து சேதமாக்கிய சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. பல லச்சம் பெறுமதியான சொத்துஇழப்பை யாழ்க்குடாநாட்டு மீனவர்கள் எதிர்நோக்கியிருந்தும் அவர்களுக்கான நிவாரணம் வழங்கப்படவில்லை. யாழ்குடாநாட்டு மீனவர்களை தமிழக மீனவர்கள் தாக்கி காயப்படுத்திய ஒரு சில சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இது சம்பந்தமாக யாழ்குடாநாட்டின் மீனவர்களும் மன்னார் மீனவர்களும் பல முறைப்பாடுகளை செய்தும் அவற்றுக்கு எந்தப்பலனும் இல்லை.
வெறுமனே இந்திய மீனவர்களை கைதுசெய்வதும் படகுகளை பறிமுதல் செய்வதும் பின்னர் அவற்றை விடுவிப்பதும் ; மீண்டும் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் அத்துமீறி நுழைவதுமாக “திருடன் - பொலிஸ்" விளையாட்டு மிக நீண்ட நாட்களாக நடந்துவருகிறது.
இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதும்; மீனவர்களின் மீன்பிடி வலைகளை “றோலர்களால் அறுத்தெறிந்து" சேதப்படுத்துவதும் ஏற்றுக்கொள்ளமுடியாத செயல்கள். இவை அப்பட்டமான குற்றச்செயல்கள். இதற்கான தண்டனையை ‘’எல்லைமீறும் தமிழக மீனவர்கள்" அனுபவித்தே ஆகவேண்டும்.
தண்டனை என்பது ‘’சுட்டுக்கொல்வது அல்ல". அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மீண்டும் ஒருமுறை தவறை செய்யாமல் இருக்க “கடுமையான தண்டனை” வழங்கப்படவேண்டும்.
இலங்கை-இந்திய கடல் எல்லை ஒரு தெளிவான நிலைப்பாட்டோடு நவீன தொழில்நுட்ப முறையில் உடனடியாக “வரையறை” செய்யப்பட்டு அதற்கான “எல்லைக்கோடு" கீறப்படவேண்டும். அந்த எல்லைக்கொடு பற்றிய விழிப்புணர்வை இருநாட்டு மீனவர்களுக்கும் தெளிவாக விளங்கப்படுத்தவேண்டும்.
இல்லையேல்;
மீண்டும் மீண்டும் இந்திய தமிழக மீனவர்களின் இரத்தம் இலங்கை-இந்திய கடற்பரப்பில் கலப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது;
இலங்கை கடற்படையின் துப்பாக்கிச்சத்தங்களை நிறுத்தவும் முடியாது!!!
மீண்டும் மீண்டும் இந்திய தமிழக மீனவர்களின் இரத்தம் இலங்கை-இந்திய கடற்பரப்பில் கலப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது;
இலங்கை கடற்படையின் துப்பாக்கிச்சத்தங்களை நிறுத்தவும் முடியாது!!!
ஆக்கம்:தமிழ்ப்பொடியன்