பொதுவாக சனிக்கிழமைசாமியார் எல்லாப்படங்களையும் தியேட்டருக்கு போய் பார்ப்பதில்லை. ஆனால் "பாகுபலியை" தியேட்டரில தான் பாப்பன் என அவரின் "ஆதீனம்" ஒற்றைக்காலில் நிண்டதால்;
ஆதீனத்தின் முடிவை அவரால் நிராகரிக்கமுடியல்லை.
ஆதினத்தின் முடிவுகளை சாமியார் எப்போதும் மறுத்துப்பேசியதில்லை. அப்படி மறுத்தால் வரும் பின்விளைவுகளை சாமியார் அனுபவரீதியாக அறிந்துள்ளார்.
(ஆதீனம் எண்டால் யாரென்பது கலியாணம் கட்டினவைக்கு விளங்கும்)
ஆதீனத்தின் முடிவை அவரால் நிராகரிக்கமுடியல்லை.
ஆதினத்தின் முடிவுகளை சாமியார் எப்போதும் மறுத்துப்பேசியதில்லை. அப்படி மறுத்தால் வரும் பின்விளைவுகளை சாமியார் அனுபவரீதியாக அறிந்துள்ளார்.
(ஆதீனம் எண்டால் யாரென்பது கலியாணம் கட்டினவைக்கு விளங்கும்)
ரண்டு "கச்சான் பைக்கற்" ,"குளிர்பான போத்தல்கள்" சகிதம் தியேட்டருக்குள் நுழையும் போதே ;
சாமியாரை அடையாளம் கண்டுவிட்டான் ஒரு "பக்தன்"!
சாமியாரை அடையாளம் கண்டுவிட்டான் ஒரு "பக்தன்"!
"சாமி நீங்கள் வடகொரிய அதிபர் கிம்முக்கு எழுதின கடிதம் awesome" என்றான்.
அவனின் அன்பு மழையில் நனைந்து ஒரு மாதிரி இருட்டுக்குள் கதிரையை தடவி கண்டுபிடிச்சு அமர்ந்தார்.
அவனின் அன்பு மழையில் நனைந்து ஒரு மாதிரி இருட்டுக்குள் கதிரையை தடவி கண்டுபிடிச்சு அமர்ந்தார்.
பக்கத்தில் ஒரு குடும்பம். பொடியன் வைத்திருந்த "கொக்க கோலா" போத்தலில் இருந்து "chivas regal" வாசம் மூக்கை துளைத்தது.
அந்த வாசத்தோடு சேர்த்து சாமியாரும் கச்சானை கொறித்தார்.
"கடைகளின் விளம்பரம்" என்ற பெயரில் ஒரு 15 நிமிடம் எங்களின் பொறுமையை சோதித்தார்கள்.
ஊரெண்டா திரைக்கு போத்தலால எறிஞ்சிருப்பார் சாமியார்.
சாமியாரும் ஒரு ரவுடிதான் ஊரில!
ஊரெண்டா திரைக்கு போத்தலால எறிஞ்சிருப்பார் சாமியார்.
சாமியாரும் ஒரு ரவுடிதான் ஊரில!
கடைசியா ஒரு மாதிரி படம் ஆரம்பமாகியது!
எழுத்தோட்டமே அந்தமாதிரி. பாட்டுகள் அதைவிட அருமை. கதை எண்டு பாத்தா; எங்களின் தமிழ்காவிய கதைகளில் இருந்து உருவியது தான். ஆனாலும் இயக்குனர் "ராயமெளலி" கையாண்ட விதம் அற்புதம்.
Graphics , VFX அட்டகாசம்!
அதுகும் அந்த ஒரு பாட்டில வானத்தில பறக்கிற கப்பல் மெய்சிலிர்க்கவைத்தது.
"ஆதினத்துக்கு" படம் ரொம்பவே பிடித்துவிட்டது. நான் பக்கத்தில இருக்கிறது தெரியாமலே படத்தில் மூழ்கிவிட்டது!
அதுகும் "தேவசேனா" வீரமா கள்ளர்களை புரட்டி புரட்டி எடுக்கும் போது "ஆதீனம்" கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தது. வாளை எடுத்து சுழட்டி வெட்டும் போதும் அம்புகளை "மல்ரிபரல்" மாதிரி விடும் போதும் ஆதினம் அதிகமான உற்சாகத்தை வெளிக்காட்டியது.
சாமியார் அவற்றையெல்லாம் கடைக்கண்ணால் பார்த்து மண்டையில் குறிப்பெடுத்துக்கொண்டார்.
படத்தில் ஒரு காட்சியில் பென்னாம் பெரிய மரக்குத்தியொண்டை பாகுபலி சிம்பிளா பிளந்துவிடுவார். பென்னாம் பெரிய கல் ஒண்டை சிம்பிளா துக்குவார்.
இதையெல்லாம் உற்றுக்கவனித்த "ஆதினம்" ஒரு அறிக்கை விட்டது.
"இப்பிடி வீரமான விசயங்கள் செய்தாத்தான் கலியாணம் எண்டால் உங்க கனபேருக்கு பொம்பிளை கிடைச்சிருக்காது"
எய்யப்பட்ட இந்த அம்பு பொதுவானதுதான் என்றாலும் அந்த அம்பில் குறிப்பாக சாமியாரின் பெயர் எழுதப்பட்டுள்ளதை சனிக்கிழமை சாமியார் தன் "ஆன்மீக அறிவால்" உணர்ந்துகொண்டார்.
திருப்பி பதில் சொன்னால் அந்த இடத்தில் "சனிக்கிழமை சாமியார்" தான் அவமானப்படுவார் என்பதை அவரின் "தீர்க்கதரிசனம்" எச்சரித்தது!
"இந்த வருசத்துக்கு இடையில் என்ர உடம்பை பாகுபலிபோல ஏத்துறன்" என மனதுக்குள் சபதம் எடுத்தார்.
இப்படியாக "சபதம்" எடுத்தது இதுதான் முதல் தடவை அல்ல.
பல தடவைகள் இப்படி தேவையில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்து "Gym membership" வீணா கட்டி ஆதினத்திடம் "கிழிய கிழிய" வாங்கிய அனுபவங்கள் சில பல நடந்திருக்கிறது.
"Gym இக்கு போறதை விட்டுப்போட்டு வீட்டு வேலையளை பாருங்கோ. உடம்பு வைக்கும்" என கண்டிப்பான உத்தரவை மீறி gym இக்கு போய் ஒரு கிழமையால போகாமல் விட்டார் சனிக்கிழமை சாமியார்.
( அந்த சோகக்கதைகளை பிறகு எழுதுறன்)
( அந்த சோகக்கதைகளை பிறகு எழுதுறன்)
சரி படத்துக்கு வாறன்.
நல்ல படம் எண்டு சொல்வற்கு அப்பால் இந்திய சினிமா ஒரு சர்வதேச தர எல்லையின் வரை சென்று கொடிகட்டிப்பறக்கிறது என்றே சொல்லவேணும். கடுமையான உழைப்பு தெரிகிறது.
நல்ல படம் எண்டு சொல்வற்கு அப்பால் இந்திய சினிமா ஒரு சர்வதேச தர எல்லையின் வரை சென்று கொடிகட்டிப்பறக்கிறது என்றே சொல்லவேணும். கடுமையான உழைப்பு தெரிகிறது.
கட்டப்பாவாக வாற "சத்தியராஜ்" இன் இடத்துக்கு ஆரைப்போட்டாலும் அது "சப்பெண்டு" போகும்.
சத்தியராஜ் தான் இந்தப்படத்தின் இன்னோரு ஹீரோ!
நாசர், ரம்மியா கிருஸ்னன் நடிப்பு சொல்லிவேலையில்லை.
வில்லன் "ராணா" மிரட்டுகிறார்.
"அனுஸ்கா" வாற காட்சிகளில் சாமியார் உற்சாகம் அடைந்தார். ஏனெனில் சாமியார் அவாவின் "உடன்கட்டையேறும் ரசிகன்-die hard fan" .
இந்த "உற்சாகம் அடைதலை" ஆதினம் கடைக்கண்களால் குறிப்பெடுத்துக்கொண்டது.
அதன் பலாபலன்கள் அப்பப்ப எதிர்காலத்தில் வெளிப்படுத்தப்படும்.
கடைசியா படம் முடிய இரவு ஒரு மணி ஆகிவிட்டது.
எந்த level park இல காரை விட்டது என்ற பெருங்குழப்பத்துக்கு ஆளான சாமியார் கடைசியில் வெத்திலையில் "மைபோட்டு" காரை கண்டுபிடித்தார்.
வீட்டுக்கு வந்த சாமியாருக்கு அவரின் நண்பன் தொலைபேசி அழைப்பு எடுத்தான்.
" மச்சான் ... படம் அந்த மாதிரி என்ன? Graphics , VFX எல்லாம் விசயின்ர புலி படத்தில வந்தமாதிரியே இருக்கு என்ன?" என்றான்.
" மச்சான் ... படம் அந்த மாதிரி என்ன? Graphics , VFX எல்லாம் விசயின்ர புலி படத்தில வந்தமாதிரியே இருக்கு என்ன?" என்றான்.
சனிக்கிழமை சாமியார் தலைக்கிறுதியில கட்டில்ல அப்பிடியே மயங்கி விழுந்தவர் தான் ....
அடுத்த நாள் விடியக்காலமைதான் எழும்பினார்.
அடுத்த நாள் விடியக்காலமைதான் எழும்பினார்.