ஞாயிறு, ஜூலை 02, 2017

"பெத்த வயிறு பத்தி எரிஞ்சு வாற கண்ணீர்" வலியது!



"இல்லை" என்று சொல்லிவிட்டு....
"சும்மா" போகமுடியாது!

காணாமல்ப்போனது "அழி ரப்பரா?"
இன்னொண்டு வாங்க..
அது என் "அண்ணா"!

படலை திறந்தே இருக்கு...
அவன் வருவான்!

"நீங்கள்" எங்களுக்கு "பதில்"
சொல்லியே ஆகவேண்டும்!

"தமிழனின் கண்ணீர்" வலியது!
சுட்டெரிக்கும்....
கவனம்!!!

"சிலுவையில்" அறையப்பட்ட
யேசு மட்டுமல்ல...

வேலேந்திய முருகனும்...
சூலம் எடுத்த மாகாளியும்...
ஊழிக்கூத்தாடும் சிவனும்...
அவதாரம் எடுக்கும் விஸ்ணுவும்...
வதம் செய்யும் பத்திரகாளியும் தான்
எங்கள் "தெய்வங்கள்" !

நிலம்
நீர்
கடல்
காற்று
வானம்
நாங்கள் கையெடுத்து கும்பிடும் கடவுள்கள்!

போதிமரத்தின் கீழ்....
எல்லா அநியாயங்களையும் பார்த்தும்;
கண்மூடி இருக்கும் "புத்தன்" அல்ல!

வானம் அதிர...
வயிறெரிந்து குழறும் ...
வன்னித்தாயின்...
"சாபங்களை" சாதாரணமாய் நினைக்காதீர்கள்!

"பெத்த வயிறு பத்தி எரிஞ்சு வாற கண்ணீர்" வலியது!
"கவனம்" அது சுட்டெரிக்கும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge