ஞாயிறு, ஜூலை 02, 2017

எங்கட சனம் திருந்தாது!



எங்கட சனம் திருந்தாது!
நானே நானூறு முறை சொல்லியிருப்பன்.
நானே திருந்தாமல்.

படிச்சவன் எல்லாரும் பொய் சொல்லமாட்டான், ஏமாத்தமாட்டான், சுத்தமாட்டான் எண்ட "பரிசுத்த மனநிலையில்" இருந்து நாங்கள் இன்னும் வெளிவரவில்லை.

உதாரணத்துக்கு;
வைத்தியர் ஒருத்தர் உயிரோட இருக்கும் உன்னை"செத்துவிட்டார்" எண்டு சொன்னா....
நீ சுடலையில எழும்பி ஒப்பாரி வைச்சாலும் உன்னை இந்த சமூகம் நம்ப தயாரில்லை. 
அவ்வளவு படிச்ச "டொக்டருக்கு" தெரியாதோ எண்டு சொல்லி உன்னை அடிச்சுக்கிடத்தி "கொள்ளி" வைச்சுப்பொட்டு போகும் "மனநிலையில்" தான் எங்களின் சமூகம் இப்போதும் இருக்கிறது!

"சேர்" எண்டு நாங்கள் எங்களுக்கு படிப்பிச்ச வாத்தியாரை தவிர வேறு யாரையும் கூப்பிட்டதில்லை!
ஆனால்;
யாழ்ப்பாண ஆசுப்பத்திரியில்:
60 வயது முதியவர் 30 வயது வைத்தியர் பொடியனைப்பாத்து"சேர்" எண்டு கூப்பிடும் போது;
எனக்கு "பத்திக்கொண்டு" வந்தது!

நான் அந்த வைத்தியரை "தம்பி" எண்டன்!
அவன் என்னை "முறைச்சுப்பாக்கிறான்"!
தன்னை "சேர்" எண்டு நான் கூப்பிடவில்லை எண்டு அவனுக்கு கோபம்!
அந்த நேரம் நான் முணுமுணுத்தன்..
"எங்கட சனம் திருந்தாது!"

வெளிநாட்டில் இருந்து ஊருக்குப்போய் "கிலுக்கிப்போட்டு" ...
மீண்டும் கனடா வந்து "எங்கட சனம் திருந்தாது!" எண்டு சொல்லுறவையின் பட்டியலில் நானும் ஒருவன்!
ஊருக்குப்போய் "விலாசம்" காட்டிப்போட்டு, வேலைவெட்டி இல்லாமல் சும்மா ஊர்சுத்தும் தம்பிக்காரனுக்கு 5 லச்சத்துக்கு மோட்டச்சைக்கிளும் அதுக்கு பெற்றோலும் "புள் ராங் full tank" அடிச்சுக்குடுத்துப்போட்டு வந்து;
" எங்கட சனம் திருந்தாது!" எண்டு சொல்லுற கனக்கப்பேரில் நானும் ஒருத்தன்!

கூப்பிடு தூரத்தில இருக்கிற "குஞ்சியப்புவின்ர" வீட்டுக்கு குறுக்கால நடந்து போகலாம். ஆனால் அதுக்கும் "ஆட்டோ" பிடிச்சு போட்டு வந்திட்டு....
"எங்கட சனம் திருந்தாது!" எண்டு சொல்லுறவையில் நானும் ஒருத்தன்!

ஊரிலை இருக்கிறவங்களை..
அதைச்செய்
இதைச்செய்
அதைப்புடுங்கு
இதைப்புடுங்கு...
எண்டு உசுப்பேத்திப்போட்டு
ஒண்டும் செய்யாமல் இருந்து
"எங்கட சனம் திருந்தாது!"
எண்டு சொல்லும் கனபேரில் நானும் ஒருத்தன்!
அவன் "சப்பறம்" பிடிச்சா நான் "இசைக்குழு" பிடிப்பன்.
அவன் நாலு கூட்டு மேளம் எண்டா;
நான் பத்து கூட்டு மேளம்!
இப்பிடி காசைக்கரியாக்கிப்போட்டு ...
கனபேர் சொல்லுற வசனம்:
"எங்கட சனம் திருந்தாது!"

"பலாலியில ஹெலி வாடகைக்கு" இருந்தால் அதையும் எடுத்து கலியாணவீடு செய்யுற அளவுக்கு பந்தாவும் பகட்டும் காட்டிவிட்டு கனபேர் சொல்லுற வசனம்:
"எங்கட சனம் திருந்தாது!"

ஓட்டுபோட்ட கட்டைவிரலையும் வெட்டி அரசியல்வாதிகளிடம் கொடுத்துவிட்டு....
கனபேர் சொல்லுற வசனம்:
"எங்கட சனம் திருந்தாது!"

ஊரில "கஞ்சா" கடத்தினால் என்ன?
களவெடுத்தால் என்ன?
பக்கத்துவீடு பத்தி எரிஞ்சால் என்ன?
ஊரே நாசமா போனால் எனக்கென்ன!
சனத்தை பேக்காட்டி கொள்ளை அடிச்சால் எனக்கென்ன!
படிச்சவன் ஊரில இருக்கிறவன் இதையெல்லாம் பாத்தும் பாக்காமல் போனா உனக்கென்ன!

ஊருக்குப்போனியா...
கிடாயை வெட்டினியா...
கோழியை உரிச்சியா...
கசூறினா beach போனியா...
கள்ளைக்குடிச்சியா....
கவுண்டு படுத்தியா எண்டு இருக்கவேணும்!

திருவிழா போனியா...
காவடி எடுத்தியா...
கறுத்தக்கொழும்பான் திண்டியா...
கட்டுநாயக்கா வந்து;
கனடா flight ஏறினியா ...எண்டு இருக்கவேணும்.

கருத்துச்சொல்லுறது எண்டா
கனடா திரும்பி வந்து சொல்லு!

கடைசியா கனடாவில் இருந்து சொல்லுறன்...
"எங்கட சனம் திருந்தாது!"
"நானும் திருந்தன்!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge