🔱
கொடியில உடுப்பு போட்டனான் . எடுத்துவைச்சனியளே?
👗
புடுங்கித்தின்னிறதிலேயே குறியா இருங்கோ!
உப்பிடியே உந்த போனுக்குள்ள கிடந்து நாசமாப்போங்கோ
இப்படியாக பல "ஏச்சுகளை" தாண்டியே என் பதிவுகள் இந்த உலகின் வெளிச்சத்துக்கு வருகிறது என்பதை யார்தான் அறிவார்களோ?
அறையை பூட்டிப்போட்டு நான் கதறிக்கதறி அழுவதை நீங்கள் அறிய வாய்ப்பில்லைத்தான்!
இவ்வளவு கஸ்ரங்களை கடந்து எழுதும் பதிவுகளுக்கு like போட்டா குறைஞ்சே போடுவியள்?
நன்றி கெட்ட சனமப்பா
😢
நன்றி கெட்ட சனமப்பா
இவை எல்லாவற்றுக்கும் மேலாக..
சனிக்கிழமை ஆனால் மட்டும்;
சனிக்கிழமை ஆனால் மட்டும்;
"என்ன சனிக்கிழமை சாமியாரை காணவில்லை?" எண்டு மனிசி கேக்கும் போது மட்டுமே நான் "பேரானந்தம்"அடைகிறேன்!
"ஆஸ்கார் விருது" கிடைத்தது போல!!!
😝
பேசாமால் பேரை மாத்திடலாமோ எண்டு கூட "லூசுத்தனமா" யோசிப்பன்!
"நீங்கள் எலெக்சனில நிண்டால் நான் கூட ...வாக்குப்போடன்"எண்டு சொல்லும் என்ர மனிசி சனிக்கிழமை சாமியாரின் பதிவுக்கு like போடும் போது ...
ஏன் நான் எலெக்சன் கேக்கக்கூடாது எண்டு கூட "கேணைத்தனமா" ஜோசிப்பன்!
ஏன் நான் எலெக்சன் கேக்கக்கூடாது எண்டு கூட "கேணைத்தனமா" ஜோசிப்பன்!
"எல்லாப்புகழும் மனிசிக்கே!!!"
😝

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக