செவ்வாய், ஜூலை 12, 2016

புறுபுறுப்பு



செய்தி: வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தாமல் இருந்தது.பல மில்லியன் ரூபா நிதி மீண்டும் அரச திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்படவிருந்தது. விசேட அனுமதியில் மீண்டும் முழுமையாக பயன்படுத்த கால நீடிப்பு.

புறுபுறுப்பு:
அடப்பாவிகளா...
வடக்கு மாகாணசபை , வடக்கு மாகாண அரசியல் மேதாவிகளே!!!
உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா???

காசை வைச்சு இழுத்தடிச்சு ...
மாகாணசபை தேர்தல் வருகுதுதானே..
இனி நல்லா அள்ளி வீசுவியள்!!!

எங்கட சனமும் திருந்தாது!
நாங்களும் திருந்தமாட்டம்!!
அப்ப நீங்கள் எதுக்கு திருந்தவேணும் என்ன???

முடிஞ்சா வடமராட்சி கிழக்கு எண்டு ஒரு பிரதேசம் வடக்கு மாகாண சபைக்கு கீழ தான் இருக்கு. நேரமிருந்தா ஒருக்கால் போய்ப்பாருங்கோ!!!



🔴தமிழ்ப்பொடியன்®

12/12/2015



Comments
Ravimany Anuraviththi வாங்கோ நான் கூட்டி போறன் இடம் காட்ட
Ayshaa Kumaragurumoorthy அண்ண உத திருப்பி அனுப்பினவர் சி.வியராம்... வாட் எ ட்ராஜடி
Thamayanthy Ks உரிய காலத்தில தெருவைத்திருத்த காசு குடுக்காம மழைவந்த பிறகு கொடுத்ததால கானை வெட்டி ரோட்டிலபோட மழை கூடவர சனம் நடக்கவும் முடியாம வாகனங்களும் போகாம் மல்லாவிப் பகுதி கிராமங்கள் முடக்கப்பட்டிட்டுது. வாழ்க நும் தேசத் தொண்டு.
Jude Prakash ஒரு தனி நாட்டை, ஒரு நிழல் அரசாங்கத்தை திறம்பட நடாத்தி காட்டிய இனமடா நாங்கள். இதை வாசிக்க வெட்கமாயிருக்கு. 

நல்ல நல்ல தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் இருக்கிற தீவிரத்தை ஆட்சி நடாத்துவதிலும் காட்ட வேண்டும்.
...See More
Vimaleshwara Sabaratnam இதில் வடக்கு மாகாண சபையின் பிழை அரைவாசியெண்டால் மிச்ச அரைவாசிப்பிழை எங்களின் மேல்த்தான் இருக்கிறது.
சரியான வினைத்திறன் இல்லாதவர்களை மாகாண சபைக்கு தெரிவுசெய்து அனுப்பியது யார்?
நாங்கள் தானே!!!
...See More
Jude Prakash சரியா சொன்னீங்க தம்பி.. 👏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge