திங்கள், பிப்ரவரி 15, 2021

சனிக்கிழமைசாமியாரும் "றாணி சோப்பும்"!

கிட்டத்தட்ட பத்து வருசத்துக்கு பிறகு "றாணி" சோப்பில ஒரு குளிப்பு!

ஊரில முந்தி கிணத்தடியில அள்ளி முழுகிப்போட்டு றாணி சோப்பை காகம் எடுக்காமல்;

கிணத்துவேலி கிடுகுக்குள்ள ஒழிச்சுவைப்பம்.

(ஆனால் இப்ப ஊரில காகங்கள் சோப்பை எடுப்பதில்லை. காகங்கள் இப்ப களவெடுப்பதில்லை)

பள்ளிக்கூடத்துக்கு "றாணி" சோப்பு குளிச்சுப்போட்டு வாற பெட்டைகளின்  வாசம் சும்மா  சுண்டி இழுக்கும்!

என்னதான் "சோப்பு" வந்தாலும் றாணி சோப்பு வாசம் ஒரு தனிரகம்!

அம்மாவாணை புழுகையில்லை. ஒருக்கா வாங்கி குளிச்சுப்பாருங்கோ. 

வெளிநாட்டில இருக்கிற எனக்கு ஊர்வாசம் வீடுமுழுக்க மணக்குறமாதிரி ஒரு "பீலிங்" ;-)

அதுகும் கிணத்தடியில் வாளியால அள்ளி குளிக்கிறது வேற லெவல் "சொர்க்கம்"!

கிணத்தடியும் வாளியும் பாக்க இன்னும் ஒரு வருசம் ஆகும் போல கிடக்கு.

அதனால " சோட்டைக்கு" இண்டைக்கு "றாணி சோப்" குளியல்!

#சனிக்கிழமைசாமியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge