"பெரிய முதலாளி bigboss" நிகழ்ச்சியில் எங்கட கிளிநொச்சிப்பெட்டை ஒண்டு பங்குபற்றுவது எல்லாருக்கும் தெரியும்.
சாமியார் பெரிய முதலாளி நிகழ்ச்சியை முதலாம் நாள் தொடக்கம் பாக்குறார்.
சாமியாருக்கு வேலை வெட்டி இல்லை எண்டோ அல்லது விசர் எண்டோ சிலர் நினைக்கலாம்.நினைச்சால் நினைச்சுப்போட்டு போங்கோ.
சாமியாருக்கு இருக்கிற தலையிடிக்கு பெரிய முதலாளி நிகழ்ச்சிதான் பனடோல்.
ஆரம்பத்தில் சாமியாருக்கு ரேஸ்மா மீது ஒரு கண். பிறகு அவள் போக அபிராமி மேல சாமியாருக்கு ஒரு "இது" வந்திட்டுது. பிறகு அவள் ஒரு மாதிரி விசர்க்கூத்தாட சாமியாருக்கு "கடுப்பாகிவிட்டது"!
பிறகு வேற வழியில்லாமல் கவின்ர ரண்டாவது " செற்றப்"சாக்சிக்கு பின்னால திரிஞ்சார் சாமியார்.
சாக்சி "தம்" அடிக்கிறாள் எண்டு அறிஞ்சதும் சாமியார் சத்தம் போடாமல் செரினுக்கு பின்னால போனவர். இண்டுவரை சாமியார் செரினைத்தான் முதலாவதா வைச்சிருக்கிறார்.
விசயகுமாற்ற மோள் வனிதாவின்ர பக்கம் சாமியார் எட்டிக்கூடப்பாத்ததில்லை. ஏனெண்டால் சாமியாருக்கு அது "செற்" ஆகாது. காரணம் வாற விசருக்கு சாமியார் கன்னத்தை பொத்தி வெளுத்துப்போடுவார்.
செரின் எப்ப சீலை கட்டினாளோ; அண்டைக்கு சாமியார் தடக்கி விழுந்தவர்தான் இன்னும் எழும்பயில்லை!
லொசுலியா மேல சாமியாருக்கு ஆரம்பத்தில ஒரு விருப்பம் இருந்தது உண்மை. ஆனால் எப்ப அந்தப்பெட்டை சிரிச்சுதோ அண்டைக்கு அதைப்பாத்து பயந்த சாமியார் அதுக்குப்பிறகு அந்தப்பக்கம் போறதில்லை.
மற்றது அவா கதைக்கிற கொழும்பு தங்லீசு டமிழைக்கேட்டு ஒரு நாள் சாமியாருக்கு கடுங்கோபம்.கையில அம்பிட்டு இருந்தால் செவிட்டைப்பொத்தி ரண்டு போட்டிருப்பார்.
கவினைப்பற்றி எல்லாம் தெரிஞ்சபிறகுதான் இவா அவனுக்கு பின்னால போனவா. அவனைச்சொல்லி பிழையில்லை. இவாதான் அவன்ர குண்டிக்கு பின்னால திரியுறா!
கவினும் சேரனும் இல்லையெண்டால் பிள்ளை நாலாவது கிழமையே வெளியில போயிருப்பா. ஒரு கோதாரியும் இல்லை. தான் உள்ள இருக்கோணும் எண்டால் ஆரையும் ஒருத்தனைப்பிடிச்சால்த்தான் உள்ள இருக்கலாம் எண்டது வடிவா தெரிஞ்சுதான் உவா கவினுக்கு பின்னால போனவா.
சாமியாருக்கு தர்சனில சரியான விருப்பம். அவன் அப்பிடியே அச்சு அசல் எங்கட பொடியன். சாமியாருக்கு இருக்கும் அத்தனை குறும்பும் அவனிட்ட இருக்கு. சாமியார் தன்ர குணத்தை தர்சனில் பாக்குறார்.
கணக்காப்பாத்து செரினை மடக்கினான் பொடியன்.அங்க நிக்கிறாண்டா எங்கட யாழ்ப்பாணத்துப்பொடியன். ஒருத்தனும் கிட்ட நெருங்க ஏலாது எண்டு நினைச்ச செரினை மடக்கினதுதான் தர்சனின் கெட்டித்தனம். இருந்தாலும் பட்டும் படாமலும் கொண்டுபோறான் பொடியன்.அங்கதான் அவன்ர கெட்டித்தனம் இருக்கு. அவன் வெல்லுவான் எண்டு சாமியாரின் ஏழாம் அறிவு சொல்லுது.
சரி விசயத்துக்கு வருவம்.
லொஸ்லியான்ர தேப்பன் உள்ள வந்து கோவத்தில கத்தினவரல்லோ!
உப்பிடி கன கத்தலுகளை சாமியார் பாத்திருக்கிறார்.
உப்பிடித்தான் ஒருக்கால் சாமியாரும் அவற்ற சிநேகிதப்பொடியனும் வல்லிபுரக்கோயில்ல ஒரு பெட்டையை பாத்திட்டு பின்னால போனவை.
சொல்லகூடாது ஆள் நல்ல சிவப்பி. சாமியாருக்கு சிவத்த பெட்டையளைக்கண்ணில காட்டக்கூடாது. அதுக்கு ஒரு வலராறு இருக்கு. அது சொன்னால் பெரிய கதை.இப்ப அதைவிடுவம்.
சிவப்பியோட ஒரு கறுப்பி. கறுப்பி சாமியாரை ஓரக்கண்ணால பாத்ததால நண்பனுக்கு உதவிசெய்ய முடிவு செய்தார். சிவப்பி நண்பனுக்கு.கறுப்பி சாமியாருக்கு!
முதல்ல கடலைக்கொட்டை கடையில நிண்டு கச்சான் விலை கேட்டாளவை.ஆனால் வாங்கயில்லை. உடன நண்பன் ரண்டு கச்சான் பைக்கற்றும் மஞ்சள் கடலையும் வாங்கிக்குடுத்தான். வெக்கப்படுறமாதிரி வாங்கி திண்டாகள்.
பிறகு பூந்திக்கடைக்கு பக்கத்தில நிண்டு மண்டினாகள். இந்தமுறை சாமியார் பூந்தியும் தொதலும் வாங்கிக்குடுத்தார். அதையும் திண்டாகள்.
பிறகு றியோ கிறீம் கவுஸுக்குள்ள போனாகள். சாமியார் சொல்லியும் கேளாமல் நண்பன் உள்ள போனான்.
ரண்டு ஸ்பெசல் ஓடர் பண்ணினாகள்.
சாமியாரும் நண்பனும் வெறும் ஐஸ்கிறீம் ஓடர் பண்ணி சாப்பிட்டினம்.
சாமியார் அம்மாட்ட களவெடுத்து வந்த 150 ரூபா மண்ணாய்ப்போச்சு.
உப்பிடியே ரண்டுதரம் கோயிலைச்சுத்திப்போட்டு அச்சுவேலி போற பஸ்சில ஏறினாகள்.
சாமியார் வேண்டாம் வேண்டாம் எண்ட கொற கொற எண்டு சாமியாரை இழுத்து பஸ்சில ஏத்தினான் நண்பன்.
"அச்சுவேலி நாலு ரிக்கற்"
நண்பன் தன்ர காசில ரிக்கற் எடுத்தான்.
சிவப்பி இவனை விடுகிற மாதிரி இல்லை. ஒரே எறியல் தான்.
கறுப்பியும் சும்மா லேசுப்பட்ட ஆளில்லை.
சனத்தின்ர ஊட்டுக்குள்ளால சாமியாரைப்பாத்து கொடுப்புக்குள்ள சிரிச்சுக்கொண்டே இருந்தாள்.
"சிக்னல்" நல்லா வேலை செய்தாலும் சாமியாருக்கு ஒரு ஐமிச்சம். ஏனெண்டால் ஏற்கனவே சாமியார் உவகளின் ஜில்மாலுகளை அறிவார்.அவரின் முன்அனுபவங்கள் சாமியாரை எச்சரித்தன.
சாமியார் நண்பனுக்கு அறிவுரை சொன்னால் அவன் கேக்குற நிலையில இல்லை. காதல் மயக்கம். அதில வேற மினிபஸ்காரன் "இடைக்கால" பாட்டுகளைப்போட்டு உசுப்பேத்தினான்.
மினிபஸ் நெல்லியடியில நிக்க அவகள் ரண்டுபேரும் இறங்கினாகள்.
"அநியாயம் அச்சுவேலிக்கு நாலு ரிக்கற்"
சாமியார் கொண்டக்டரிடம் மிச்சக்காசைக்கேட்டார்.
அவன் மிச்சக்காசை தாறதுக்கு இடையில நண்பன் சாமியாரை கொற இழுவையில கீழ இறக்கி அவகளுக்கு பின்னால நடந்தான்.
"மச்சான் உனக்கு மிச்சக்காசு முக்கியமா? கறுப்பி முக்கியமா" எண்டு ஒரு அறிவுபூர்வமான கேள்வியைக்கேட்டான்.
சாமியாருக்கு மிச்சக்காசுதான் முக்கியம்.
150 ரூபா காசை அம்மாட்ட இருந்து களவெடுக்கப்பட்ட பாடு அவருக்குத்தானே தெரியும்.
கொண்டக்டர் இதுதான் தாயம் எண்டு பஸ்ஸை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான்.
கொடிகாம றோட்டால திரும்பி வாற இரண்டாவது வலப்பக்க ஒழுங்கையுள்ள இறங்கி நடந்தாளவை இரண்டுபேரும்.
"மச்சான் என்ன பேரெண்டு கேளன்" சாமியாரின் நண்பன் கெஞ்சினான்.
அவகளின் காதுக்கு அது கேட்டிருக்கவேணும்.
கறுப்பி சிவபியின்ர பேரைச்சொல்லி "கெதியா நடவடி" எண்டாள்.
கறிப்பியின்ர பேரை சிவப்பி சொல்லவேயில்லை.
முடக்கால திரும்பி நாலாவது வீட்டுக்குள்ள போனாகள்.
போகும் போது சிவப்பி திரும்பிப்பாத்து சிரிச்சாள்.
"மச்சான் ஆள் மடங்கிட்டுது" எண்டு நண்பன் குதூகலித்தான்.
கறுப்பி திரும்பி பாக்கவேயில்லை!
சரி காதல் கதைமுடிஞ்சுது எண்டு நினைப்பியள். இல்லை இனித்தான் கிளைமக்ஸ் இருக்கு.
வீட்டுக்கு பக்கத்தால சுடுதண்ணி குடிச்ச நாய் மாதிரி பதினெட்டு தரம் குறுக்காலும் மறுக்காலும் நடந்திருப்பம். உள்ள போனவகள் வரவேயில்லை.
கறுப்பியிர வீடா இல்லை சிவப்பியின்ர வீடா தெரியவில்லை!
"மச்சான் வா போவம். நாளைக்கு வருவம்" எண்டு சாமியார் கேட்டார்.
"மச்சான் ஒரே ஒருக்கால் பாத்திட்டுப்போவம்" எண்டு ஒத்தைக்காலில நிண்டு கெஞ்சினான் நண்பன்.
திடீரெண்டு கறுப்பி வெளியில வந்து;
கேற்றைத்திறந்து வந்தாள்.
சாமியாரும் நண்பனும் எதிர்வீட்டு வேலியோட நிண்ட பூவரச நிழலில் நிண்டிச்சினம்.
"உங்கட பேர் என்ன?" எண்டு கேட்டாள்.
சாமியாரின் தலைக்கு மேல நாலஞ்சு சிவத்த வண்ணத்துப்பூச்சிகள் பறந்தன.
சாமியார் தன்ர பேரைச்சொன்னார்.
"நான் உங்கட பேரைக்கேக்கயில்லை. அவற்ற பேரைக்கேட்டனான்" எண்டாள்.
சாமியாரின் தலைக்கு மேல பறந்த நாலைஞ்சு சிவத்த வண்ணத்துப்பூச்சிகள் இப்ப நண்பனின் தலைக்கு மேல பறந்தன.
நண்பன் தன்ர பேரைச்சொன்னான்.
கறுப்பி தன்ர பேரைச்சொல்லிவிட்டு வெக்கத்தில திரும்பிச்சென்றாள்.
கேற்று வாசலில் நிண்ட சிவப்பி சாமியாரைப்பாத்து சிரித்தாள்.
இப்ப நண்பனின் தலைக்கு மேல பறந்த வண்ணத்துப்பூச்சிகள் சாமியாரின் தலைக்குமேல பறந்தன.
சாமியாருக்கும் நண்பனுக்கும் அப்பதான் விசயம் விளங்கியது.
கடுப்பான நண்பன் ஆத்திரத்தில் சாமியாரின் தலைக்கு மேல பறந்த வண்ணத்துப்பூச்சிகளை பிடிச்சு காலால உழக்கி சாக்கொண்டு போட்டு;
"வாடா போவம்" எண்டான்.
போயிருந்தால் பிரச்சினை வந்திராது.
ஏழரைச்சனியன் சும்மா விட்டால்த்தானே!!!
சாமியார் சிவப்பியோட ஒருக்கால் கதைப்பம் எண்டு கேற்றுக்கு கிட்ட போக;
கேற்றுக்கு பக்கத்தில ஒரு சைக்கிள் வந்து நிண்டுது.
பின் கரியரில வாழைக்குலையோட காண்டில்ல அரிவாள் கொழுவினபடி; லொஸ்லியான்ர தேப்பன் மாதிரி பெரிய மீசையோட ஒரு ஆள் பிறேக் அடிச்சு இறங்கினார்.
அந்தாளைக்கண்டதும் கறுப்பியும் சிவப்பியும் வீட்டுக்குள்ள ஓடிவிட்டாகள்.
கவினும் சாண்டியும் லொஸ்லியான்ர தேப்பனிட்ட மாட்டினமாதிரி சாமியாரும் நண்பனும் மாட்டுப்பட்டுப்போட்டினம்.
அஞ்சு நிமிசமா சிவப்பியின்ர தேப்பன்காரன் கேளாக்கேள்வி எல்லாம் கேட்டார்.
நண்பனும் சாமியாரும் கடைசிவரை குனிஞ்ச தலை நிமிரவே இல்லை.
இவ்வளவும் நடக்குது ஒருக்கால் கூட வெளியில வரயில்லை சிவப்பியும் கறுப்பியும்.
கொடுமை என்னண்டால்!
சிவப்பியின்ர தேப்பனனோ அல்லது கறுப்பியின்ர தேப்பனோ எண்டு தெரியாமல் ஏச்சு வாங்கினது தான் கேவலம்.
"கனக்க கதைக்காமல் உன்ர மோள் திண்ட கடலைக்கொட்டை காசையும் ஐஸ்கிறீம் காசையும் தாறியா?" எண்டு சாமியார் கேட்டிருப்பார்.
ஆனால் கரியரில் இருந்த வாழைக்குலையையும் அதை வெட்டின அரிவாளையும் பாத்த பிறகு கேக்கிறது பாதுகாப்பில்லை எண்டு உணர்ந்து சாமியார் கேக்கவேயில்லை!!!
எல்லாம் முடிய;
சாமியாரும் நண்பனும் நெல்லியடி பஸ் ஸ்ராண்டுக்கு வந்து தட்டிவானில் ஏறி பருத்தித்துறைக்கு போனார்கள். இந்தமுறை தட்டிவானில் இடைக்கால காதல் சோகப்பாட்டுகள் ஒலித்தன!!!
அதுக்குப்பிறகு அந்த சிவப்பியையும் கறுப்பியையும் மீண்டும் வல்லிபுரக்கோயிலில் கண்டார்கள்.
இந்தமுறை அவகளுக்கு பின்னால ரண்டு பொடியள் வீணி வழிய திரிஞ்சதையும் கண்டார்கள்.
பாவம் அந்தப்பொடியளின் விதி அவ்வளவுதான்.
போனகிழமை சாமியார் லொஸ்லியான்ர தேப்பன் மரியநேசனுக்கு "கோல்" அடிச்சார்.
மரியநேசன் இந்தியாவில் இருந்து கதைச்சார்.
"சாமியார் எனக்கு வாற விசருக்கு அவளுக்கு வெழுத்துப்போட்டு வந்திருப்பன். நான் அப்பிடி அவளை வளக்கயில்லை" எண்டு கோவப்பட்டார்.
"அப்ப என்ன சீலம்பாய்க்கு உள்ள விட்டனீர்? உதுகள் எல்லாம் நடக்கும் எண்டு தெரியாதோ உமக்கு?" எண்டு கேட்டார் சாமியார்.
"சாமியார் உள்ள போகேயுக்குள்ள எனக்கு என்ன சொல்லிப்போட்டு போனவள் தெரியுமோ" எண்டு கொந்தளிச்சார் மரியநேசன்!
"என்ன சொல்லிப்போட்டு போனவா?" சாமியார் கேட்டார்.
"நான் நல்லா கேமை விளையாடி கெத்தா வெண்டு வருவன் எண்டவள்" எண்டார் மரியநேசன்.
"நல்லாத்தான் கேம் விளையாடுறா உன்ர மோள். இந்தக்கிழமை பாத்தனீரோ?" எண்டார் சாமியார்.
மரியநேசனுக்கு கோவம் வந்து கடுப்பாகி ஏசிப்போட்டு போனை வைச்சிட்டார்.
எல்லாத்தேப்பன்மாருக்கும் தங்கட மோள்மார் திறம். மற்றவன் எல்லாம் கெட்டவன் எண்ட நினைப்பு!
"முதல்ல உங்கட பிள்ளையளையும் கொஞ்சம் அடக்க ஒடுக்கமா வளவுங்கோ. பிறகு பின்னால வாறவங்களை கேள்வி கேளுங்கோ " எண்டு சாமியார் தனக்குள்ள சொல்லிக்கொண்டார்.
பெரிய ஆப்பு வெகுவிரைவில் காத்திருக்கிறது.
அந்த ஆப்பு மரியநேசனுக்கா அல்லது கவினுக்கா எண்டு "டக்கு டிக்கு டோஸ்" போட்டுத்தான் பாக்கவேணும்!
#சனிக்கிழமைசாமியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக