உங்களின் மூக்கையும் காதையும் பார்வையையும் படலைக்கு வெளியில் போகவிடுங்கள்.
உங்களின் வளவை விட ஊர் 300 மடங்கு பெரியது.
உலகம் உங்கள் ஊரைவிட மூண்டு லச்சம் மடங்கு பெரியது.
உங்கட கிணத்துக்குள்ள இருக்கும் தண்ணியை விட கடல் மிக மிக பெரியது. போய்ப்பாருங்கள்!
பயணம் செய்யுங்கள். உங்கள் வீட்டுக்கு மேல் இருக்கும் வானத்தை விட உண்மையில் வானம் கோடிமடங்கு பெரியது.
முதுமையடையமுன் வீட்டை விட்டு கொஞ்சம் தூரம் நடவுங்கள்.உங்கள் வீட்டு மதிலை விட சீனப்பெருஞ்சுவர் 10000 மடங்கு பெரியது.
உலகத்தை அறிந்துகொள்ள;
யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் கனடாவுக்கு செல்லவேண்டியதில்லை.
கண்டிவரை போனாலே போதும்.
ஒரு ஊருக்குப்போங்கள் அங்கே 100வித்தியாசமான மனிதர்களை பார்ப்பீர்கள். 100 புத்தகங்களை வாசித்த அனுபவத்தை விட மேலான அனுபவத்தை உணர்வீர்கள்.
மல்லாக்கா படுத்து கூரையின் ஓட்டையால் வானத்தை பார்ப்பதை விட கூரைக்கு மேல் இருந்து வானத்தைப்பாருங்கள்.வானம் அழகாகவும் அகலமாகவும் தெரியும்.ஊரும் வடிவாத்தெரியும்!!!
என் மனசு முழுக்க "வெண்மேகங்கள்"!
ஒரே இடத்தில நில் எண்டால்;
நிற்பேனா?
எனக்கும் இறக்கைகள்...
பறக்காதே எண்டால்;
கேட்பேனா?
என் கால்களில் சக்கரங்கள்
ஒடாதே எண்டால்;
இருப்பேனா?
எனக்கு வானத்தில் தான் பாதைகள்
ஆதலால்;
நடக்கமுடியாது.
பறந்துகொண்டேயிருப்பேன்.
என் வீட்டு விலாசம்
பூமியில் இல்லை.
நாளை எங்கே இருப்பேனோ தெரியாது!
இன்று நிலாவில் நிற்கிறேன்.
#சனிக்கிழமைசாமியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக