கடவுளுக்கும் கண்ணில்லையோ -அது
கல்லாகிப்போய் கன காலமோ!
குந்த ஒரு குடிநிலம் கேட்டது பிழையோ -அதுக்கு
தமிழீழம் எண்டு பெயரிட்டதுதான் தவறோ?
அடிச்சவனை திருப்பி அடிச்சால் குற்றமோ?-நாங்கள்
அழுதுகொண்டே செத்துபோவதுதான் விதியோ?
தமிழராய் பிறந்ததுதான் தவறோ?-தமிழன்
கேக்குறதுக்கு நாதியற்ற இனமோ?
இன்னும் எத்தின நாளுக்குதான் அழுவமோ?-இதை
கேக்குறதுக்கு யாருமில்லா உலகமோ?
நாடு நாடாய் அலைவதுதான் கதியோ? அகதியாய்
செத்துப்போவதுதான் முடிவோ?
நீதி என்ன ஒரு நிறத்துக்கு மட்டுமோ? -அது
தமிழருக்கு ஒரு நாளும் கிடைக்காதோ?
மனிதாபிமானம் செத்து கனகாலமோ? -அதை
குழிதோண்டிப்புதைத்தவர்கள் தான் பெரிய ஆக்களோ?
விடுதலை கேட்பது பயங்கரவாதமோ? -அதுக்கு
உயிர் கொடுத்து போராடுறவன் தீவிரவாதியோ?
முள்ளிவாய்க்காலோட எல்லாம் முடிஞ்சுபோட்டுதோ?-இல்லை
போராடிப்பெறுவதற்கு இன்னும் இருக்குதோ?
தனித்தனியா கத்திக்கொண்டு இருக்கப்போறமா? -இல்லை
கைகோத்துஒண்டா நடக்கப்போறமா?
ஊருக்குப் போறதுக்கா இத்தனை விலைகொடுத்தோம்? -எங்களின்
உரிமை கிடைக்க கனதூரம் போகவேணுமோ?
போராடிப்பெறுவதுதான் விடுதலையல்லவா? -அதை
சும்மா பெற்றால் அதுக்குப்பேர் பிச்சையில்லையா?????
கடவுளே உனக்கு கண்ணில்லையோ?-நீ
கல்லாகிப்போய் கனகாலமோ????
-தமிழ்ப்பொடியன்-
3 people like this
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக