ஜெனிவாவில நடக்கப்போதாம் மாநாடு
அது முடிஞ்சதும் அவங்கள் தருவாங்களாம்
தமிழனுக்கு தனி நாடு!
அமெரிக்கா கொண்டுவருமாம் தீர்மானம்
அவன் இலங்கையை பிரிச்சுத்தருவான் சரிசமானம்
இந்தியாவும் ஆதரிக்குமாம் தீர்மானம்
பிறகு "என்பலப்பில" மடிச்சுத்தருவாங்களாம் தமிழீழம்!!!
முப்பது வருசம் கழிச்சுத்தான் தெரியுது "இன அழிப்பு" எண்டு!
அஞ்சு வருசம் கழிச்சுத்தான் தெரியுது "போர்க்குற்றம்" எண்டு!
இன்னும் அம்பது வருசம் கழிச்சு வரும் "தீர்ப்பு"
இருங்கோ பாத்துக் கொண்டு...!!!
மன்னாரில தோண்டுறாங்கள் "மண்டை ஓடுகள்"
சனத்தை அடிச்சு சாக்கொன்றவனே அதற்கு
காவலும் கண்காணிப்பும்..!!!
மனித உரிமையும் மண்ணாங்கட்டியும்
தமிழனுக்கு கிடைக்காது நீதியும் நியாயமும்...
முள்ளிவாய்கால் முடிஞ்சு அஞ்சு வருசம்.
மனுநீதி செத்தும் கன வருசம்
அடையாளங்களை அழிச்சும் கன வருசம்.
சாட்சிகள் இல்லாத இன அழிப்பு
இதை செய்யச்சொன்னதே ஐ.நா
அமெரிக்கா ஆயுதம் குடுக்க
யுகே துணை நிற்க
சோனியா வழிமொழிய
நம்பியார்(ஐ.நா) செய்த இன அழிப்பு இது.
முள்ளிவாய்க்கால் அவலம் ஒன்றும் மூன்று நாளில் நடக்கவில்லை
வருசக்கணக்காய் நிகழ்ந்த பேரவலம்
அவலம் நடந்தது ஒன்றும் செவ்வாய் கிரகத்தில் அல்ல
ஐ.நா வின் கண்ணுக்கு முன்னால்
இன்னுமா நம்புது உலகம்...
ஐ.நா ஒரு மனித உரிமை அமைப்பெண்டு??
செத்த நீதிக்கும் நியாயங்களுக்கும் "போஸ்மோட்டம்" செய்யும்
பிணவறை மன்றம் தான் ஜெனிவா மன்றம்..!!!
வெள்ளையனின் உடலில தான்ரா ஓடுது ரத்தம்
தமிழன் சிந்தினது வெறும் தண்ணி..!!!
வெள்ளையன் சொல்லுறதுதான் நீதி
மற்றவன் செய்யுறது எல்லாம் அநீதி!
நாயைக்கொண்டா நாலுவருசம் சிறையில் போடும்
வெள்ளைகளின் "நீதி"
நாப்பதாயிரம் சனத்தை கொன்றவனுக்கு
விரிப்பான் "செங்கம்பள வீதி"
கேக்க நாதியற்ற இனமடா ஈழத்தமிழினம்
பக்கத்தில ஆறுகோடி இருந்தும் அழிஞ்ச இனம்
வெட்டிப்புதைச்சவனும் கொன்று குவிச்சவனும்
கூட நின்றவனும்தான் நீதிபதிகள்
அவங்கள் குடுப்பாங்கள் நீதி தட்டில வச்சு!!!
ஆயுதம் அள்ளிக்குடுப்பான் பின் வளவால -பிறகு
நல்லா நடிப்பாங்கள் வளவுக்கு முன்னால!!
ஜெனிவாவில காட்டப்போறாங்கள் "சினிமா"
கதை, வசனம் :அமெரிக்கா
தயாரிப்பாளர் :இந்தியா
இயக்கம் :யூகே..
விநியோகம் :ஐ.நா
உந்த படம் ஓடும் நல்லா இன்னும் அஞ்சு வருசம்....!!!
கேக்க நாதியற்ற இனமடா -ஈழத்தமிழினம்
பக்கத்தில ஆறுகோடி இருந்தும் -அழிஞ்ச இனம்!
மனித உரிமை மாநாடும் மண்ணாங்கட்டியும்.....!!!!
தமிழ்ப்பொடியன்
02/02/2014
முக்கியகுறிப்பு: இது சாதாரண என்னைப்போன்ற சனங்களின்ர புலம்பல்.
அதுக்காக மனித உரிமைக்காகவும் தமிழரின் நீதிக்காகவும் போராடும் யாரையும் அவர்கள் செய்யும் செயல்கள் வீண் என்றும் சொல்லவில்லை.
எங்களின் மனநிலையில் உந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐ.நாவும் 5 வருசமா என்னத்தை புடுங்குறாங்கள் என்ற மன வெப்பியாரம் தான் மிச்சமாய் கிடக்குது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக