ஊடக பயங்கரவாதம்
(Media mafia)
(Media mafia)
யாழ்ப்பாணத்தில் இப்போது லஞ்சம், ஊழல் என்பதற்கு அடுத்தபடியாக தமிழ் ஊடகங்களின் பயங்கரவாத செயல்கள் தலைதூக்கி ஆடுகின்றன.
ஊடக சுதந்திரத்துக்காக குரல் எழுப்பும் தமிழ் ஊடகங்கள் எதுவுமே நியாயமாக செய்திகளை வெளியிடுவதில்லை.
ஏதாவது ஒரு தனிநபரின் துதிபாடலாகவும் அல்லது கட்சிகளின் துதிபாடலாகவும் தான் வெளிவருகின்றன.
அச்சடிக்கப்படும் ஒவ்வொரு சொற்களுக்கும் "பணம்" சம்பாதித்துவிடும் ஒரு மனநிலையே காணப்படுகிறது.
சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்கும் வல்லமை அற்ற வெறும் "நோஞ்சான்களாகவே" இருக்கிறது ஊடகங்கள்.
துணிவாய் யாரும் எழுதினால் கூட அதை வெளியிடும் "திராணியற்ற" ஊடகங்களாக இருப்பதாய் அண்மையில் ஒரு யாழ்ப்பாணத்து ஊடகன் பதிவிட்டான்.
ஒண்டு உண்மையோட நிலூங்கோ!
அல்லது பொய்யோட நில்லுங்கோ!
நடுநிலை எண்டு பேக்காட்டிக்கொண்டு ரண்டு பக்கமும் "தடவுவது" பிழை.
அல்லது பொய்யோட நில்லுங்கோ!
நடுநிலை எண்டு பேக்காட்டிக்கொண்டு ரண்டு பக்கமும் "தடவுவது" பிழை.
ஊடகங்கள் என்பது சமூகத்தின் காவல் நாய்கள். குரைக்கவேண்டும். வாலாட்டக்கூடாது.
சமூக நீதியை நிலைநாட்ட ஊடகங்களின் பங்களிப்பு மிக மிக அவசியம்.ஆனால் இன்று பல ஊடகங்கள் பிரிவினைகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன.
"பேப்பர்" என்பது ஒரு சமூகத்தின் கண்ணாடி.உடைத்துவிடாதீர்கள்!
மக்களுக்கு நேர்மையாய் செய்தி சொல்லவேண்டும் என்ற வைராக்கியத்தோடு வாழ்ந்து அதற்காகவே இறந்த...
நிமலாரஜன், நடேசன் போன்றோரின் சாபம் உங்களை சுட்டெரிக்கும்.
கவனம்!!!!
நிமலாரஜன், நடேசன் போன்றோரின் சாபம் உங்களை சுட்டெரிக்கும்.
கவனம்!!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக