உனக்கான சிம்மாசனத்தை நீயே உருவாக்கு!!!
அதில் மட்டுமே ஏறி திமிரோடும் செருக்கோடும் உட்கார்ந்துகொள்.
அதில் மட்டுமே ஏறி திமிரோடும் செருக்கோடும் உட்கார்ந்துகொள்.
எவனோ செய்து அதை உனக்காக வைத்திருப்பான் என நினைக்காதே!!!
அதை எதிர்பார்த்து காத்திருந்தால்; நிச்சயம் நீ ஏமாந்துபோவாய்.
அதை எதிர்பார்த்து காத்திருந்தால்; நிச்சயம் நீ ஏமாந்துபோவாய்.
வழி நெடிகிலும் பல அழகான கதிரைகள் உனக்காக வழங்கப்படும். இளைப்பாறு! ஆனால் அவற்றிலே நிரந்தரமாய் இருந்துவிடாதே!!
அவற்றினை கடந்து போக கற்றுக்கொள்.
அவற்றினை கடந்து போக கற்றுக்கொள்.
உன்னை இந்த உலகம் அங்கிகரிக்கும் என ஏங்கி ஏங்கியே வாழ்வை வீணாக்கிவிடாதே!
முயற்சிகள் என்பது பூக்கள் போல!
எல்லாம் காயாவதும் இல்லை.
காயானது எல்லாம் கனியாவதும் இல்லை!!!
எல்லாம் காயாவதும் இல்லை.
காயானது எல்லாம் கனியாவதும் இல்லை!!!
ஒரு சிறு வட்டத்துக்குள் இல்லாமல் உனக்கான எல்லைகளை நீயே கீறிக்கொள்.உன் வல்லமைகளை தாண்டி கொஞ்சம் எட்டாத உயரத்தில் எல்லைகளை வை!
பறந்துகொண்டேயிரு.
வானம் மிகமிகப் பெரியது!!!
தொட்டுவிடும் தூரத்தில் இருந்தால் அதற்கு பெயர் வானம் அல்ல, கூரை!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக