வெள்ளி, ஜூன் 02, 2017

மே18!!

மே18






மரணம் எங்களை சப்பித்துப்பியது!
மரணம் எங்களை பிய்த்து எறிந்தது!
மரணம் எங்களை அம்மணமாக்கியது!
மரணம் எங்களின் குருதியை குடித்தது!
மரணம் எங்களின் குரல்வளைநெரித்தது!
மரணம் எங்களை பட்டினி போட்டது!
மரணம் எங்களை மண்டியிடவைத்தது!

மரணமே எங்களை நிமிர்ந்திடவும் வைத்தது!
மரணமே எங்களுக்கு வழியையும் காட்டியது!
மரணமே எங்களை வாழவும் சொன்னது!
மரணம்தான் மனிதர்களை
அடையாளம் காட்டியது!
மரணமே எங்களின் வாழ்வாய்ப்போனது!!!

"மே18"
ஒற்றை வரியில் எழுதிவிடும் வலியும் அல்ல!
ஒப்பாரி வைத்து அழ இது விதியும் அல்ல!
மறந்துவிட்டுப்போக இது கனவும் அல்ல!
கேட்பார் இன்றி நின்ற இனம்!!
உலகம் திரும்பி பாரா இனம்!!
வஞ்சித்து முழுசாய் அழிச்ச இனம்!!
இன்னும் தன் வாய் திறக்காத இனம்!!

அன்பை உலகுக்கு சொன்ன இனம்
அறிவால் உயர்ந்து நின்ற இனம்
வீரமே உயிராய் வாழ்ந்த இனம்
தனக்காய் நாடு கண்ட இனம்
தன்னிறைவோடு வாழ்ந்த இனம்
தன்மானத்தோடு நிமிர்ந்த இனம்
தரணியே போற்ற வாழ்ந்த இனம்

கொடும்புனல் அடித்துமே
சில்லம்பல்லமாய் சிதறி..
போர் தின்ற இனம்.
வெந்தணல் மீதினில் கருகி...
ஒப்பாரி சத்தம் ஊரெல்லம் கேட்க..
உயிர் சாம்பலாய் போன இனம்.

நீதிக்காய் அலைந்து நிர்க்கதியாய்
நிற்கும் இனம்.
இன்றும் வலிகளை சுமக்கும் ஈழத்தமிழினம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge