இனியும் எதற்கு நாடகம்?
முள்வேலிக்குள் மீண்டும் தூக்குமேடையா!
முள்வேலிக்குள் மீண்டும் தூக்குமேடையா!
நந்திக்கடலை எதற்கு தூர் வாருகிறீர்கள்?
முள்ளிவாய்க்காலில் எதை கிண்டிப்பாக்குறியள்?
முள்ளிவாய்க்காலில் எதை கிண்டிப்பாக்குறியள்?
எட்டு வருடமாச்சு
உக்கியிருக்கும்,
விட்டுவிடுங்கள்.
பாவம்...
அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!
உக்கியிருக்கும்,
விட்டுவிடுங்கள்.
பாவம்...
அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!
மீண்டும்!
எங்கள் வீட்டு வேலியில் "கிளைமோர்"
கட்டப்படலாம்!
கட்டப்படலாம்!
எங்கள் பின் வளவுக்குள் துருப்பிடித்த
துப்பாக்கிகள் கிடைக்கலாம்!
துப்பாக்கிகள் கிடைக்கலாம்!
என் தம்பியின் புத்தகப்பைக்குள்
"ரவைகள்" கண்டுபிடிக்கப்படலாம்!
"ரவைகள்" கண்டுபிடிக்கப்படலாம்!
எங்கள் வீட்டு கோழிக்கூட்டுக்குள் இருந்து "கிரனைட்" எடுக்கப்படலாம்!
ஏன் கனக்க ;
என் அக்காவின் தாலிக்குப்பதிலாய்
சயனைற் கட்டப்படலாம்!
என் அக்காவின் தாலிக்குப்பதிலாய்
சயனைற் கட்டப்படலாம்!
நேற்றுத்தானே முள்ளிவாய்க்காலில்
கதறினார்கள்....
"எங்கட பிள்ளைகளை திருப்பி தாங்கோ"
கதறினார்கள்....
"எங்கட பிள்ளைகளை திருப்பி தாங்கோ"
இன்று;
பளையில் பொலிஸ் வாகனத்துக்கு துப்பாக்கிச்சூடு.பொலிசார் காயம்.
பளையில் பொலிஸ் வாகனத்துக்கு துப்பாக்கிச்சூடு.பொலிசார் காயம்.
நாளை;
முள்ளிவாய்க்காலில் தன் மூத்த பிள்ளையை காணவில்லை என
கதறிய தாயின்...
கடைக்குட்டி கைதுசெய்யப்படலாம்!
முள்ளிவாய்க்காலில் தன் மூத்த பிள்ளையை காணவில்லை என
கதறிய தாயின்...
கடைக்குட்டி கைதுசெய்யப்படலாம்!
இனியும் எதுக்கு நாடகம்?
"அவர்களிடம்"ஒண்டுமே இல்லை.
உயிர்களைத்தவிர!
"அவர்களிடம்"ஒண்டுமே இல்லை.
உயிர்களைத்தவிர!
அவர்களை வாழ விடுங்கள்;
அல்லது...
நிம்மதியாகவேனும் சாகவிடுங்கள்!
அல்லது...
நிம்மதியாகவேனும் சாகவிடுங்கள்!
கவனமாக தேடுங்கள்!
பளை பொலிஸ் நிலைய துப்பாக்கியின் ரவைகள் இரண்டு காணாமல் போயிருக்கும்.
பளை பொலிஸ் நிலைய துப்பாக்கியின் ரவைகள் இரண்டு காணாமல் போயிருக்கும்.
அல்லது கொடிகாமத்தின் இராணுவ
முகாமில் இருந்தும் கூட ரவைகள் காணாமல் போயிருக்கலாம்.
முகாமில் இருந்தும் கூட ரவைகள் காணாமல் போயிருக்கலாம்.
சிங்கள பேப்பரால் சுத்தி ;
கண்டெடுக்கப்பட்ட கிளைமோர் போல!!!
கண்டெடுக்கப்பட்ட கிளைமோர் போல!!!
நேற்றுத்தானே ...
செத்தவர்களுக்காய் அழுதோம்.
இன்னும் அழுத கண்ணீர் ஈரம் காயவேயில்லை!
செத்தவர்களுக்காய் அழுதோம்.
இன்னும் அழுத கண்ணீர் ஈரம் காயவேயில்லை!
இன்று ...
உயிரோடு உள்ளவர்களுக்காய் அழுகிறோம்.
உயிரோடு உள்ளவர்களுக்காய் அழுகிறோம்.
நாங்கள் சபிக்கப்பட்ட அடிமைகள்.
எங்களை கழுத்தில் இறுக்க கட்டுக!
எங்கள் குரல்வளைகளை நசுக்குக!
சப்பாத்து கால்களால் உழக்குக!
எங்களை தூக்கிலிடுக!
அடையாளங்களை அழித்துவிடுக!
முடிந்துவிட்டதாயும் வென்றுவிட்டதாயும்
ஆர்ப்பரிக்குக!
எங்கள் குரல்வளைகளை நசுக்குக!
சப்பாத்து கால்களால் உழக்குக!
எங்களை தூக்கிலிடுக!
அடையாளங்களை அழித்துவிடுக!
முடிந்துவிட்டதாயும் வென்றுவிட்டதாயும்
ஆர்ப்பரிக்குக!
நாங்கள் மெளனமாகவே குற்றுயிரோடு செத்துப்போவோம்!
முன்பொரு வைகாசியில் மூச்சடங்கியது போல!
முன்பொரு வைகாசியில் மூச்சடங்கியது போல!
எங்களை மீண்டும் தோண்டி எடுத்து
சித்திரவதை செய்து...
கொன்று புதையுங்கள்.
உங்கள் ஆத்திரங்கள் அப்போதென்றாலும்
அடங்கட்டும்!
சித்திரவதை செய்து...
கொன்று புதையுங்கள்.
உங்கள் ஆத்திரங்கள் அப்போதென்றாலும்
அடங்கட்டும்!
புத்தனின் சிலையை...
ஆரியகுளத்து சந்தியில் பெயர்த்தெடுத்து
நல்லூரான் உள்வீதியில் பிரதிஸ்டை செய்க!
ஆரியகுளத்து சந்தியில் பெயர்த்தெடுத்து
நல்லூரான் உள்வீதியில் பிரதிஸ்டை செய்க!
"சிங்க லே" கொடியை கிளிநொச்சி வீதியின் மின்கம்பத்தில் மட்டும் அல்ல...
எங்கள் பனை மரங்களிலும் கட்டிவிடுக!
எங்கள் பனை மரங்களிலும் கட்டிவிடுக!
எது வேண்டுமானாலும் செய்யுங்கள்!!
ஏனெனில்;
"சிறிலங்கா அபே ரடே(எங்கட நாடு)"என;
போனகிழமைதான் "ஞானசார தேரர்"
கொழும்பில் கத்திச்சொன்னார்.
கொழும்பில் கத்திச்சொன்னார்.
நாங்கள் சபிக்கப்பட்ட ஆடுகள்..
நீங்கள் பசியடங்கும் வரை தின்னலாம்.
வைச்சு சூடாக்கி சூடாக்கி நாளைக்கும் தின்னலாம்!
நீங்கள் பசியடங்கும் வரை தின்னலாம்.
வைச்சு சூடாக்கி சூடாக்கி நாளைக்கும் தின்னலாம்!
"ஏன்"என்ற கேள்வி யாருமே கேட்கமாட்டார்கள்!
ஏனெனில்;
நாங்கள் "சபிக்கப்பட்ட" அடிமைகள்!
நாங்கள் "சபிக்கப்பட்ட" அடிமைகள்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக