
இலங்கையிலுள்ள மொத்த சனத்தொகையில் சுமார் 1.5 சத வீதமானோர் சிறைச்சாலைகளில் இருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.
“பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் 25 சிறைச்சாலைகளில் 31 ஆயிரத்து 653 பேர் தற்போது வைக்கப்பட்டுள்ளார்கள். 260 பேர் மரண தண்டனைக் கைதிகள். 184 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகள்” என தெரிவித்துள்ள அவர் இந்தக் கைதிகளில் 541 பேர் தங்களுடைய தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்தக் கைதிகளின் வயதைப் பொறுத்த வரை 46 சத வீதமானோர் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 36.5 சதவீதமானோர் போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள். 3.6 வீதமானோர் பொது இடங்களில் மது போதை குறித்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களில் 15,000 பேரின் விசாரணை அறிக்கைகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதால் அவர்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக