எதை தேடுறியள்?
அந்தரிக்கும் அந்த ஆத்மாக்கள் இரண்டையா!
அந்தரிக்கும் அந்த ஆத்மாக்கள் இரண்டையா!
எதை தேடுறியள்?
மதிலிக்கு பின்னால் ஒழிந்திருக்கும்
பேரினவாதத்தையா!
மதிலிக்கு பின்னால் ஒழிந்திருக்கும்
பேரினவாதத்தையா!
எதை தேடுறியள்?
புதைக்கப்பட்ட மனிதாபிமானத்தையா!
புதைக்கப்பட்ட மனிதாபிமானத்தையா!
எதை தேடுறியள்?
செத்துப்போன நீதியையா!
செத்துப்போன நீதியையா!
எதை தேடுறியள்?
ஒழிக்க மறந்த தடயங்களையா!
ஒழிக்க மறந்த தடயங்களையா!
எதை தேடுறியள்? மாத்தையா!
அம்மாவாணை எங்களுக்கு விளங்கவேயில்லை!
அம்மாவாணை எங்களுக்கு விளங்கவேயில்லை!
சுட்ட துப்பாக்கிகள்
பத்திரமா இருக்க;
வெற்றுத்தோட்டாக்களை;
ஏன் வீணாத் தேடுறியள்?
இறந்தவர்களின் "இரத்தசாசனம்"
மதிலில் அழியாமல் கிடக்கு!
உங்களுக்கு "அந்த" மொழியும் தெரியாது!
அவர்களின் வலியும் புரியாது!
மதிலில் அழியாமல் கிடக்கு!
உங்களுக்கு "அந்த" மொழியும் தெரியாது!
அவர்களின் வலியும் புரியாது!
கண்கலங்கும் சிங்கள மாணவர்களைக்கேளுங்கள்.
இரத்தக்கறைகளையும் எங்கள் அழுகுரல்களையும்...
சிங்களத்தில் மொழிபெயர்த்து தரக்கூடும்!
இரத்தக்கறைகளையும் எங்கள் அழுகுரல்களையும்...
சிங்களத்தில் மொழிபெயர்த்து தரக்கூடும்!
வானத்தை நோக்கி சுட்ட சூடு
வயிற்றுவழி துளைக்க..
காவல்த்துறை என்ன!
கண்கட்டி வித்தைக்காரனா?
கொன்றவனிடமே நீதி கேட்டு
குழறுவது தமிழனுக்கு இதுவா முதல்தடவை?
வயிற்றுவழி துளைக்க..
காவல்த்துறை என்ன!
கண்கட்டி வித்தைக்காரனா?
கொன்றவனிடமே நீதி கேட்டு
குழறுவது தமிழனுக்கு இதுவா முதல்தடவை?
இல்லையே!!!
கொல் ..
மீண்டும் கொல்..
மீண்டும் மீண்டும் கொல்லுங்கள்
தடயங்களே இல்லாமல் கொல்லுங்கள்!
நாங்கள் நேந்துவிடப்பட்ட “கிடாய்கள்”
நீங்கள் வெட்டுவதில் தப்பேயில்லை!!
தேடுவதும்;
அழிப்பதும்;
புதைப்பதும்;
எரிப்பதும்;
புதிதல்லவே உங்களுக்கு!
அழிப்பதும்;
புதைப்பதும்;
எரிப்பதும்;
புதிதல்லவே உங்களுக்கு!
முற்றவெளியில் கருக்கி;
செம்மணியில் புதைத்தீர்கள்!
செம்மணியில் புதைத்தீர்கள்!
முள்ளிவாய்க்காலில் எரித்து;
புங்குடுதீவில் புதைத்தீர்கள்!
புங்குடுதீவில் புதைத்தீர்கள்!
மாத்தையோ!
சுட்ட துப்பாக்கிகள்
பத்திரமா இருக்க;
வெற்றுத்தோட்டாக்களை;
ஏன் வீணாத் தேடுறியள்?
சுட்ட துப்பாக்கிகள்
பத்திரமா இருக்க;
வெற்றுத்தோட்டாக்களை;
ஏன் வீணாத் தேடுறியள்?
கொத்துக்கொத்தாய்
கொன்றது போக;
எஞ்சியதை சொச்சம் சொச்சமாய்;
முடிக்கப்பாக்குறியள்!
கொன்றது போக;
எஞ்சியதை சொச்சம் சொச்சமாய்;
முடிக்கப்பாக்குறியள்!
புண்ணாகிப்போன கண்ணில் அழுவதற்கும் தண்ணியில்லை!
கல்லாகிப்போன கடவுளுக்கும்
கண்ணில்லை!
இனியெதுக்கு??
மண்ணாகிப்போ நல்லூர் முருகா!!!
நீ...
மண்ணாகிப்போ!!!
துன்பம் நேர்கையில்
“முருகா” எண்டு முணுமுணுக்கும்;
உன் அடியவனின் அடிவயிறு
எரிஞ்சு திட்டுறன்...
நீ..........
மண்ணாகிப்போ முருகா!!!
#தமிழ்ப்பொடியன்
26/10/2016
26/10/2016



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக