வியாழன், ஆகஸ்ட் 18, 2016

உலகில் நிம்மதியாய் வாழச்சிறந்த நகரம் எது?

உலகத்தில் மிகச்சிறந்த வாழ்க்கைத்தரம்(world's most liveable city) உள்ள நகரமாக அவுஸ்திரேலியாவின் “மெல்பேர்ண் நகரம்” தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த வருடத்துடன் சேர்த்து தொடர்ந்தும் ஆறாவது வருடமாக தன் முதலாவது இடத்தை “மெல்பேர்ண் நகரம்” தக்கவைத்துள்ளது.

மிகவும் கஸ்ரமான வாழத்தகுதியுடைய நகரமாக சிரியாவின் தலைநகரான “டமக்கஸ் நகரம்” இருக்கிறது.



இந்த கருத்துக்கணிப்பையும் ஆராய்ச்சி முடிவையும் EIU( Economist Intelligence Unit) எனும் அமைப்பு அறிவித்துள்ளது.

நிம்மதியாக சிறந்த வாழ்க்கைதரத்துடன் வாழக்கூடிய நகரங்களின் போட்டியில்; அவுஸ்திரேலியாவின் மூன்று நகரங்கள் முதல் ஏழு இடத்துக்குள் வந்திருக்கின்றன.

மெல்பேர்ண் -1அடிலைட்-5பேர்த்-7


தூரதிஸ்டவசமாக போனவருடம் 7ஆம் இடத்தில் இருந்த அவுஸ்திரேலியாவின் இன்னொரு நகரான சிட்னி இந்தமுறை முதல் பத்து இடத்துக்குள் கூட வரவில்லை.

இதற்கான முக்கியகாரணமாக போனவருடம் அந்த நகரில் நடந்த “பயங்கரவாத தாக்குதலே” ( heightened perceived threat of terrorism) ஆகும்.

உலகத்தில் உள்ள முக்கியமான 140 நகரங்கள் இந்த போட்டியில் பங்குபெற்றன.

வாழ்க்கைத்தரம்,சுகாதாரம்,கல்வி,கட்டுமானங்கள்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலாச்சாரம் போன்ற முக்கியமான விடயங்கள் இந்த தெரிவில் பங்குவகித்தன.

இந்தவருடம் 97.5 புள்ளிகள் எடுத்து மெல்பேர்ண் நகரம் தன்னுடைய முதலாவது இடத்தை ஆறாவது வருடமாகவும் தக்கவைத்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ஆஸ்ரியாவின் “வியன்னா நகரம்” உள்ளது.



மெல்பேர்ண் நகரம் கடந்த பல ஆண்டுகளாக உலகமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என சொல்லப்படுகிறது.
#சுவையான கோப்பி- tasty coffee
#பல்சமூக உணவுக்கடைகள்- multicultural  restaurants
#இனிமையான இரவுவாழ்க்கை- beautiful nightlife
#அழகிய சுற்றுலா இடங்கள்- attractive tourist places
#பழகுதற்கு இனிய மக்கள் - local people
#ரம்மியமான அழகிய கடற்கரைகள்- sandy beaches
என மெல்பேர்ண் நகரம் தன்னை கவர்ச்சிகர நகராக காட்டி உலகத்தில் மிகச்சிறந்த நகராக மிளிர்ந்து நிற்கிறது.





மெர்பேண் நகருக்கு புலம்பெயர்ந்த மக்கள் பலரும் தாங்கள் மிக நல்லதொரு வாழ்வை கண்டெடுத்துள்ளோம் என பாராட்டியுள்ளார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து இங்கு வந்தவர்கள் பலர் தாங்கள் நல்ல உத்தியோகத்தை இந்த நகரத்தில் பெற்றுக்கொண்டோம் என கூறியுள்ளார்கள்.

இந்த நகரத்துக்கு வியாபாரம் செய்ய வந்தவர்களும் மிகவும் உற்சாகமாகவும் இலாபத்தோடும் தங்களின் வியாபாரம் நடக்கிறது என புகழ்ந்துள்ளார்கள்.

மெல்பேர்ண் நகர மேயர் ”ரொபேர்ட் டொய்லே” கருத்து தெரிவிக்கையில்;
“இந்த அங்கிகாரம் சும்மா வழங்கப்படவில்லை. ஒரு நல்ல வாழ்க்கைசூழலை இந்த நகரத்தில் ஏற்படுத்த பல நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம். தொடர்ந்தும்
நாங்கள் எல்லோரும் சேர்ந்து இந்த நகரத்தின் முன்னேற்றத்துக்கு உழைப்போம்” என்றார்.



#தமிழ்ப்பொடியன்©


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Recent Posts Widget

Facebook Badge